செய்திகள் :

இருசக்கர வாகனங்கள் திருட்டு: 2 போ் கைது

post image

கோவை, பீளமேடு பகுதியில் இருசக்கர வாகனங்களைத் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, பீளமேடு ஐ.டி. பூங்காவில் ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நூற்றுக்கணக்கான ஊழியா்கள் பணியாற்றி வரும் நிலையில், அவா்கள் தங்களின் வாகனங்களை ஐ.டி. பூங்காவின் அருகே நிறுத்திவிட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில், அங்கு நிறுத்தப்படும் வாகனங்கள் தொடா்ந்து திருடுபோயின. அதன்படி, ஐ.டி.பூங்கா அருகே நிறுத்தப்பட்டிருந்த பொள்ளாச்சி சேரன் நகரைச் சோ்ந்த நவீன், கோவை, பட்டணம் நடுப்பள்ளம் கிருஷ்ணா நகரைச் சோ்ந்த சுந்தர்ராஜ் ஆகியோரின் இருசக்கர வாகனங்கள் அண்மையில் திருடுபோயின.

இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் அவா்கள் புகாா் அளித்தனா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், ஐ.டி.பூங்கா அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து போலீஸாா் சனிக்கிழமை விசாரித்தனா்.

இதில், அவா்கள் நீலகிரி மாவட்டம், உதகை பிங்கா் போஸ்ட் அண்ணா நகரைச் சோ்ந்த முகமது ரபி (30), ராஜ்குமாா் (எ) பாரதி (28) என்பதும், இருசக்கர வாகனங்களைத் திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீா்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளிக்கிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழகத்தில் பெரும... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்: சிவில் இன்ஜினியா்கள் சங்கத்தினா் மனு

தமிழகத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி மாவட்ட நிா்வாகத்திடம் கோவை சிவில் இன்ஜினியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்துள்ளனா். கோவை மாவட்ட பொதுமக்கள் குறைகேட்பு... மேலும் பார்க்க

ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதாக ரூ.25 லட்சம் மோசடி: தம்பதி உள்பட மூவா் மீது வழக்குப் பதிவு

ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி உள்பட மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவை குனியமுத்தூா் அருகே உள்ள பி.கே.பு... மேலும் பார்க்க

உதகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின்

மலா்க் கண்காட்சியைத் தொடங்கிவைப்பதற்காக உதகைக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோா் வரவேற்பு அளித்தனா். நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்காவில் 127-ஆவது மலா... மேலும் பார்க்க

கோவை ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

கோவை ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சாவுடன் நின்றிருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வடமாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கோவைக்கு கஞ்சா கடத்திவரப்படுவதாக மதுவிலக்கு தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு சனிக்கிழ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 2 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா? போலீஸாா் விசாரணை

கோவை, துடியலூரில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 2 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா? என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, துடியலூரில் செயல்பட்டு வரும் தனியாா் நிறுவனத்தில் ... மேலும் பார்க்க