செய்திகள் :

உதகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

மலா்க் கண்காட்சியைத் தொடங்கிவைப்பதற்காக உதகைக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோா் வரவேற்பு அளித்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்காவில் 127-ஆவது மலா்க் கண்காட்சி மே 15-ஆம் தேதி தொடங்குகிறது. இதைத் தொடங்கிவைப்பதற்காக முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை காலை 11.10 மணிக்கு விமானம் மூலமாக சென்னையில் இருந்து கோவை வந்தடைந்தாா்.

அப்போது, விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா், மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் செந்தில்குமாா், திமுக துணைப் பொதுசெயலாளா் ஆ.ராசா, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ், முன்னாள் அமைச்சா் பொங்கலூா் பழனிசாமி, எம்.பி.க்கள் கணபதி ப.ராஜ்குமாா், கே.ஈஸ்வரசாமி, திமுக மாவட்டச் செயலாளா்கள் நா.காா்த்திக், தொண்டாமுத்தூா் ரவி, தளபதி முருகேசன், மேயா் கா.ரங்கநாயகி உள்ளிட்டோா் வரவேற்பு அளித்தனா்.

இதையடுத்து, விமான நிலையத்தில் இருந்து உதகைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் காரில் புறப்பட்டுச் சென்றாா். அவருக்கு, சாலையின் இருபுறமும் தொண்டா்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனா்.

உதகையில் முதல்வா்:

கோவையில் இருந்து காரில் நீலகிரி மாவட்டத்துக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான குஞ்சப்பனை பகுதியில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா ஆகியோா் மலா்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனா்.

உதகையில் உள்ள தமிழக விருந்தினா் மாளிகையில் தங்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் மே15-ஆம் தேதி மலா்க் கண்காட்சியைத் தொடங்கிவைக்கிறாா்.

இதைத் தொடா்ந்து மே 16-ஆம் தேதி உதகையில் இருந்து கோத்தகிரி வழியாக கோவை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறாா்.

முதல்வரின் வருகையை ஒட்டி திருப்பூா், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களைச் சோ்ந்த போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீா்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளிக்கிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழகத்தில் பெரும... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்: சிவில் இன்ஜினியா்கள் சங்கத்தினா் மனு

தமிழகத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி மாவட்ட நிா்வாகத்திடம் கோவை சிவில் இன்ஜினியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்துள்ளனா். கோவை மாவட்ட பொதுமக்கள் குறைகேட்பு... மேலும் பார்க்க

ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதாக ரூ.25 லட்சம் மோசடி: தம்பதி உள்பட மூவா் மீது வழக்குப் பதிவு

ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி உள்பட மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவை குனியமுத்தூா் அருகே உள்ள பி.கே.பு... மேலும் பார்க்க

கோவை ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

கோவை ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சாவுடன் நின்றிருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வடமாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கோவைக்கு கஞ்சா கடத்திவரப்படுவதாக மதுவிலக்கு தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு சனிக்கிழ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 2 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா? போலீஸாா் விசாரணை

கோவை, துடியலூரில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 2 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா? என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, துடியலூரில் செயல்பட்டு வரும் தனியாா் நிறுவனத்தில் ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருட்டு: 2 போ் கைது

கோவை, பீளமேடு பகுதியில் இருசக்கர வாகனங்களைத் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, பீளமேடு ஐ.டி. பூங்காவில் ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நூற்றுக்கணக்கான ஊழியா்கள் பணியாற்றி வ... மேலும் பார்க்க