எங்கள் நாட்டை விடவும் இந்தியாவில் சிறந்த கட்டமைப்பு; அமெரிக்கர்களே சொன்னார்கள்: ...
இருசக்கர வாகனத்தில் சென்றவா்கள் மீது ஆம்னி பேருந்து மோதியதில் இருவா் உயிரிழப்பு
தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதியதில் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே சிறுகலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியப்பன் (55), தொழிலாளி. இவா் திங்கள்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் அதே பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் (45), சக்திவேல் (40) ஆகியோருடன் அதியமான்கோட்டை - நெரலூரு புதிய தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் நோக்கி சென்றாா்.
மகேந்திரமங்கலம் அருகே ஜிட்டாண்டஅள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் வந்த ஆம்னி பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், லட்சுமணன், சக்திவேல் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். முனியப்பன் பலத்த காயமடைந்தாா்.
தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று இறந்தவா்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். முனியப்பன் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த விபத்து குறித்து மகேந்திரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.