பென்னாகரத்தில் 68 மி.மீ. மழை பொழிவு
பென்னாகரம்: பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழையின் அளவு 68 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வந்தனா்.
இந்த நிலையில், பென்னாகரம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பகல் வேளையில் கடும் வெயில் தாக்கினாலும், மாலை வேளையில் குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. பென்னாகரம், தாசம்பட்டி, பெரும்பாலை, சின்னம்பள்ளி, ஒகேனக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமாா் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்கள், வயல்வெளிகள், சாலையோரங்களில் மழைநீா் தேங்கியது. பென்னாகரத்தில் 68 மி.மீ., ஒகேனக்கல்லில் 12 மி.மீ. என மழை அளவு பதிவாகியுள்ளது.