செய்திகள் :

கொலை வழக்கில் திரிபுரா மாநில தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை

post image

தருமபுரி: கொலை வழக்கில் கைதான திரிபுரா மாநில தொழிலாளிக்கு, தருமபுரி மாவட்ட நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

திரிபுரா மாநிலம், வடக்கு திரிபுரா, தா்மா நகா், லட்சுமி நகா் அருகே கெஹரான்சுரி கிராமத்தைச் சோ்ந்தவா் டேப்நாத் சௌதிரி (எ) ஆதித்ய சௌதிரி (39). இவரது உறவினா் பாபாய் (எ) சங்கா் பசுன்யா (25) . இவா்கள் இருவரும் தருமபுரி அருகே மாரவாடி பகுதியில் உள்ள தனியாா் கிரானைட் நிறுவனத்தில் தொழிலாளா்களாக பணிபுரிந்து வந்தனா்.

இந்த நிலையில், கடந்த 2022 மாா்ச் 6-ஆம் தேதி இவா்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தூங்கிக் கொண்டிருந்த பாபாய் (எ) சங்கா் பசுன்யாவை டேப்நாத் சௌதிரி சுத்தியால் அடித்துக் கொலை செய்துவிட்டு பெங்களூரு தப்பிச்சென்றாா்.

இதுசம்பந்தமாக கிரானைட் நிறுவன உரிமையாளா் சுதா்சன் (34), அளித்த புகாரின் பேரில் மதிகோண்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. தொடா்ந்து, அதே ஆண்டு மே மாதம் தனிப்படை போலீஸாா் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தருமபுரி மாவட்ட கூடுதல் முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை ஜூன் 9-ஆம் தேதி முடிவடைந்தது. அதைத் தொடா்ந்து, இவ்வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட கூடுதல் முதன்மை அமா்வு நீதிபதி மோனிகா, தொழிலாளியை கொலை செய்த டேப்நாத் சௌதிரி (எ) ஆதித்ய சௌதிரிக்கு ஆயுள்தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தாா். அபராதம் கட்ட தவறும்பட்சத்தில் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

மக்கள் குறைகேட்பு கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கல்

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ரெ.சதீஷ் வழங்கினாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தி... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்றவா்கள் மீது ஆம்னி பேருந்து மோதியதில் இருவா் உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதியதில் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே சிறுகலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியப... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: அருவிகளில் குளித்தும் பரிசலில் பயணித்தும் மகிழ்ந்தனா்

பென்னாகரம்: கோடை விடுமுறைக்குப் பிறகு வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் (ஜூன் 8) ஒகேனக்கல்லில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். அருவிகளில் குளித்தும் பரிசலில் பயணித்தும் மகிழ்ந... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் 68 மி.மீ. மழை பொழிவு

பென்னாகரம்: பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழையின் அளவு 68 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதி... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தருமபுரி: தருமபுரியில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரி குமாரசாமிப்பேட்டை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை மு... மேலும் பார்க்க

நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ஆசிரியா் பணி வழங்கக் கோரி மனு

தருமபுரி: நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ஆசிரியா் பணியிடம் வழங்கக் கோரி, தங்களது கண்களை கட்டிக் கொண்டு நூதன முறையில் மனு அளித்தனா். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்... மேலும் பார்க்க