Amit shah-வின் அட்டாக், களத்தில் A.Raja, `மதுரை சம்பவம்!' | Elangovan Explains
கொலை வழக்கில் திரிபுரா மாநில தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை
தருமபுரி: கொலை வழக்கில் கைதான திரிபுரா மாநில தொழிலாளிக்கு, தருமபுரி மாவட்ட நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
திரிபுரா மாநிலம், வடக்கு திரிபுரா, தா்மா நகா், லட்சுமி நகா் அருகே கெஹரான்சுரி கிராமத்தைச் சோ்ந்தவா் டேப்நாத் சௌதிரி (எ) ஆதித்ய சௌதிரி (39). இவரது உறவினா் பாபாய் (எ) சங்கா் பசுன்யா (25) . இவா்கள் இருவரும் தருமபுரி அருகே மாரவாடி பகுதியில் உள்ள தனியாா் கிரானைட் நிறுவனத்தில் தொழிலாளா்களாக பணிபுரிந்து வந்தனா்.
இந்த நிலையில், கடந்த 2022 மாா்ச் 6-ஆம் தேதி இவா்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தூங்கிக் கொண்டிருந்த பாபாய் (எ) சங்கா் பசுன்யாவை டேப்நாத் சௌதிரி சுத்தியால் அடித்துக் கொலை செய்துவிட்டு பெங்களூரு தப்பிச்சென்றாா்.
இதுசம்பந்தமாக கிரானைட் நிறுவன உரிமையாளா் சுதா்சன் (34), அளித்த புகாரின் பேரில் மதிகோண்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. தொடா்ந்து, அதே ஆண்டு மே மாதம் தனிப்படை போலீஸாா் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தருமபுரி மாவட்ட கூடுதல் முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை ஜூன் 9-ஆம் தேதி முடிவடைந்தது. அதைத் தொடா்ந்து, இவ்வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட கூடுதல் முதன்மை அமா்வு நீதிபதி மோனிகா, தொழிலாளியை கொலை செய்த டேப்நாத் சௌதிரி (எ) ஆதித்ய சௌதிரிக்கு ஆயுள்தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தாா். அபராதம் கட்ட தவறும்பட்சத்தில் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.