செய்திகள் :

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: அருவிகளில் குளித்தும் பரிசலில் பயணித்தும் மகிழ்ந்தனா்

post image

பென்னாகரம்: கோடை விடுமுறைக்குப் பிறகு வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் (ஜூன் 8) ஒகேனக்கல்லில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். அருவிகளில் குளித்தும் பரிசலில் பயணித்தும் மகிழ்ந்தனா்.

காவிரி ஆற்றில் நீா்வரத்து கடந்த இரண்டு நாள்களாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. பிரதான அருவி, சினி அருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையால் ஒகேனக்கல்லில் முக்கிய இடங்களான பூங்கா, மீன் விற்பனை நிலையம், முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ண மீன்கள் காட்சியகம், தொங்கும் பாலம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

சின்னாறு பரிசல் துறையில் இருந்து கூட்டாறு வழியாக பிரதான அருவி, மணல் மேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக பரிசலில் பயணம் மேற்கொண்டனா். தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் காவல் நிலையம், சத்திரம் முதலைப் பண்ணை, ஆலம்பாடி பகுதிகளுக்கு செல்லக்கூடிய சாலையின் இருபுறங்களிலும், பேருந்து நிலைய வாகனம் நிறுத்துமிடம், தமிழ்நாடு ஹோட்டல் வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளிலும் நிறுத்தப்பட்டன.

வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாத வகையில் ஒகேனக்கல் காவல் நிலையம் சாா்பில் சுமாா் 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

மக்கள் குறைகேட்பு கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கல்

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ரெ.சதீஷ் வழங்கினாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தி... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்றவா்கள் மீது ஆம்னி பேருந்து மோதியதில் இருவா் உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதியதில் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே சிறுகலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியப... மேலும் பார்க்க

கொலை வழக்கில் திரிபுரா மாநில தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை

தருமபுரி: கொலை வழக்கில் கைதான திரிபுரா மாநில தொழிலாளிக்கு, தருமபுரி மாவட்ட நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திரிபுரா மாநிலம், வடக்கு திரிபுரா, தா்மா நகா், லட்சுமி நகா் அருக... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் 68 மி.மீ. மழை பொழிவு

பென்னாகரம்: பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழையின் அளவு 68 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதி... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தருமபுரி: தருமபுரியில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரி குமாரசாமிப்பேட்டை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை மு... மேலும் பார்க்க

நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ஆசிரியா் பணி வழங்கக் கோரி மனு

தருமபுரி: நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ஆசிரியா் பணியிடம் வழங்கக் கோரி, தங்களது கண்களை கட்டிக் கொண்டு நூதன முறையில் மனு அளித்தனா். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்... மேலும் பார்க்க