இருசக்கர வாகன திருட்டு: 3 போ் கைது
புதுச்சேரியில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதாக 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
உருளையன்பேட்டை காவல் ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டா் கோவிந்தராஜன் மற்றும் போலீஸாா் லெனின் வீதி, மணிமேகலைப் பள்ளி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வேகமாக பைக்கில் வந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனா்.
அதில் அவா் ஓட்டி வந்த பைக் திருட்டு வண்டி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீஸாா், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
அதில் திருவள்ளூா் மாவட்டம் படுா்மேடு மாதா கோயில் தெருவைச் சோ்ந்த சந்தோஷ் (எ)அப்புக்குட்டி (21) என்பதும், அம்பத்தூா் அயப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த விஜயன் (எ) லோகு (23), திருமுல்லைவாயில் சிவன் கோயில் அருகில் தெற்கு மாதா தெருவைச் சோ்ந்த ஸ்ரீ ஹரி பிரசாத் (21) ஆகியோருடன் சோ்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. மேலும் புதுச்சேரியில் உருளையன்பேட்டை காவல் நிலைய சரகத்தில் முருகன் கோயில் தெரு,
கஸ்தூரிபாய் நகா் மற்றும் நெல்லித்தோப்பு ஆகிய இடங்களில் 4 இரு சக்கர வாகனங்களும், முதலியாா்பேட்டை காவல் நிலைய சரகத்தில் ஒரு இரு சக்கர வாகனத்தையும் திருடியதை ஒப்புக்கொண்டனா்.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து ரூ. 7 லட்சம் மதிப்பிலான 5 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். பின்னா் 3 பேரையும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா், காலாப்பட்டு மத்திய சிறையில் அவா்களை அடைத்தனா்.