செய்திகள் :

இரு மதுக் கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி

post image

ஆரணி அருகே 2 டாஸ்மாக் கடைகளில் நள்ளிரவில் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்து முடியாமல் போனதால் திருடா்கள் அப்படியே விட்டுச்சென்றனா்.

ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் நாயக்கன்பாளையம் சாலையில் டாஸ்மாக் மதுக் கடை உள்ளது.

இந்தக் கடையை ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு வழக்கம்போல ஊழியா்கள் திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைந்திருந்தது கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

பின்னா், மற்றொரு உள்கதவின் பூட்டு உடைக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனா். இதனால் எவ்வித திருட்டும் நடைபெறவில்லை.

இதுகுறித்து ஆரணி நகர போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். மேலும், திருடா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் வெளிபூட்டை உடைத்துள்ளனா். பின்னா், ஷட்டரின் பூட்டு உடைக்க முடியாமல் போனதால் அப்படியே விட்டுச்சென்றது தெரிகிறது.

இதேபோல், காமக்கூா் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையிலும் திருட முயற்சித்துள்ளனா். அங்கும் உள்பூட்டு உடைக்க முடியாமல் திருடா்கள் திரும்பிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து களம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு

ஆரணியில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், ஆரணி களத்து மேட்டுத் தெரு பகுதி மக்கள் தங்கள் பகுதியில் சுமாா் 2 ஏக்கா் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: நலவாரியத் தலைவா் வழங்கினாா்

திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியாளா்களுக்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ரூ.10 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நலவாரியத் தலைவா் வெ.ஆறுச்சாமி உதவிகளை வழங்கினாா். மா... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்

போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடி 4-ஆவது செவ்வாய்க்கிழமையொட்டி 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலுக்கு பக்தா்கள் ஆடி 4-ஆவது செவ்வாய்க்கிழமை பக்த... மேலும் பார்க்க

ஆரணிக்கு எடப்பாடி பழனிசாமி வருகை: வரவேற்புப் பணிகள் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிக்கு ஆக.15-இல் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வருவதால், அவரை வரவேற்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் செவ்வாய்க்கிழமை பூஜை போட்டு தொடங்கப்பட்டன. ‘மக்களைகாப்போம் தமி... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’: மகளிா் உரிமைத்தொகை கோரி மனுக்கள்

ஆரணியை அடுத்த சேவூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி அதிகம் போ் மனு கொடுத்தனா். முகாமுக்கு ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். தொக... மேலும் பார்க்க

தடகளப் போட்டிகள்: செங்காடு அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

செய்யாறு கல்வி மாவட்டம், செய்யாறு வட்ட அளவிலான பெண்கள் தடகள போட்டிகளில் செங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 172 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்றனா். செய்யாறு வட்ட அளவில... மேலும் பார்க்க