செய்திகள் :

"இறந்தவர்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்" - ராகுல் காந்தியின் பேச்சுக்கு அருண் ஜெட்லி மகன் பதில்

post image

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி குறித்துப் பேசிய கருத்துக்களுக்கு அவரது மகன் கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார்.

விவசாயிகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது இந்திய அரசாங்கம் எதிர்க்கட்சியின் எதிர்ப்பைக் குறைக்க அருண் ஜெட்லி வழியாக தன்னை மிரட்டியதாகப் பேசியிருக்கிறார் ராகுல் காந்தி.

அருண் ஜெட்லி
அருண் ஜெட்லி

"மிரட்டும் குணமுடையவரல்ல என் தந்தை"

அதற்கு எதிராக ட்வீட் செய்த அருண் ஜெட்லியின் மகன் ரோகன் ஜெட்லி, "விவசாயச் சட்டங்கள் தொடர்பாக மறைந்த என் தந்தை அருண் ஜெட்லி தன்னை மிரட்டியதாக ராகுல் காந்தி இப்போது கூறுகிறார்.

என் தந்தை 2019ம் ஆண்டு மரணமடைந்தார் என்பதை நான் அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். வேளாண் சட்டங்கள் 2020ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டன.

மிக முக்கியமாக யாரும் எதிரான பார்வை கொண்டிருப்பதற்காக மிரட்டும் குணமுடைய நபரல்ல என் தந்தை. அவர் ஒரு உறுதியான ஜனநாயகவாதி, எப்போதும் ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் நம்பிக்கைக் கொண்டிருந்தார்.

அரசியலில் நடக்கக் கூடிய இதுபோன்ற சூழ்நிலைகள் எழுந்தால், அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருமித்த தீர்வை அடைய சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விவாதங்களுக்கு அழைப்பு விடுத்திருப்பார். அவர் அப்படித்தான் இருந்தார், இன்றும் அவரது மரபு தொடர்கிறது.

நம்முடன் இல்லாதவர்களைப் பற்றிப் பேசும்போது ராகுல் காந்தி இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.

இதேபோல மனோகர் பாரிக்கர் ஜியைப் பற்றியும் பேச முயன்றார். அவரது இறுதி நாட்களை அரசியலாக்க முயன்றதும் மோசமான செயல்பாடு.

இறந்தவர்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்" என எழுதியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

'லாக் போடும் Modi,தாண்டி அரசியல் செய்யும் EPS,கூட்டணி ட்விஸ்ட்! | Elangovan Explains

ஓபிஎஸ் திமுக பக்கம் நெருக்கம் காட்டுவதால் உச்சகட்ட கோபத்தில் இருக்கும் மோடி.' எடப்பாடி அணுகுமுறையால் தான் இத்தனை சிக்கல்கள்' என செக்கு வைக்கும் அமித்ஷா. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் ஸ்டாலின். ... மேலும் பார்க்க

'இது மோசமான சாதிய சமூகம்’ - Suba Veerapandian Interview | Kavin murder case | Vikatan

நெல்லை கவின் ஆணவக் கொலை தமிழ் சமூகம் என்னவாக மாறியிருக்கிறது என்பது குறித்த கேள்விகளுக்கு விடையளிக்கிறார் திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் மேலும் பார்க்க

'நயினாருக்கு எதிராக ஓபிஎஸ்' டு Coolie இசை வெளியீட்டு விழா; 02.08.2025 முக்கிய செய்திகள்!

'தி கேரளா ஸ்டோரிஸ்' படத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன். ``கேரளாவின் நற்பெயரை கெடுக்கும், வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் தெளிவான நோக்கத்... மேலும் பார்க்க

மோடி - ஓபிஎஸ் சந்திப்பு விவகாரம்: "இனியாவது உண்மைய பேசுங்க" - நயினார் நகேந்திரனைத் தாக்கும் ஓபிஎஸ்

முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியுள்ளது அவரது பயணத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

Rahul Gandhi: "நான் ராஜா அல்ல; ராஜா என்ற கோட்பாட்டுக்கு எதிரானவன்" - ராகுல் காந்தி ஓபன் டாக்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த பிறகு தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார்.அதன்பின்னர், காங்கிரஸ் எம்.பி-யாகச் செயல்பட்டு வந்த ராகுல் காந்தி தற்போது மக்களவை எதிர்க்கட... மேலும் பார்க்க