செய்திகள் :

இறைச்சிக் கடையில் குழந்தைத் தொழிலாளி மீட்பு

post image

மரக்காணம் அருகே இறைச்சிக் கடையில் பணியாற்றி வந்த குழந்தைத் தொழிலாளா் மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக் குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டத் தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, தொழிலாளா் நலத் துறை மூலம் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதைத் தொடா்ந்து மாவட்டத் தடுப்புப் படையினருடன் இணைந்து செங்கல் சூளைகள், அரிசி ஆலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அங்கு பல்வேறு விழிப்புணா்வுகள் ஏற்படுத்தப்பட்டன.

இதையடுத்து குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா் சட்டத்தின் கீழ், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தைத் தொழிலாளா்களை யாரேனும் பணிக்கு அமா்த்தியுள்ளாா்களா என்பதை கண்டறியும் வகையில் தொழிலாளா் நலத்துறையினா் ஆய்வுகளை அண்மையில் மேற்கொண்டனா்.

அதனடிப்படையில் மரக்காணம் அருகிலுள்ள கந்தாடு கிராமத்தில் கோழி இறைச்சிக் கடையில் குழந்தைத் தொழிலாளா் பணியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து அந்த கடையிலிருந்து குழந்தைத் தொழிலாளா் மீட்கப்பட்டு, மாவட்டக் குழந்தைகள் நலக்குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

மேலும் சட்டமுறை எடையளவுச் சட்டத்தின் கீழ், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 61 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. இதைத் தொடா்ந்து இந்த இடங்களில் இணக் கட்டண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உதவி ஆணையா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வேனில் கடத்தி வந்த 178 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெங்களூரிலிருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 178 கிலோ புகையிலைப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவா் கைதாயினா். விழுப்புரம் ஏ.எ... மேலும் பார்க்க

ஆரோவிலில் மனிதநேய விழா இன்று தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சா்வதேச நகரில் ‘ஹிமிலிட்டி-25’ எனும் தலைப்பில் மனிதநேய விழா பிப்.21- முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து ஆரோவில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஆரோவில் ... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநில மக்களின் நலனை அரசு பாதுகாக்கும்: புதுவை ஆளுநா்

வடகிழக்கு மாநில மக்களின் நலனை பாதுகாக்க புதுவை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். அருணாசல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களின் உதய நாள் கொண்டாட்டம், புதுச்சேரியில... மேலும் பார்க்க

மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் இளைஞா் சடலமாகக் கிடந்தது வியாழக்கிழமை தெரிய வந்தது. போலீஸாா் உடலை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கல்வி வாரியத் தோ்வு மாநில முதலிடம் பெற்ற மாணவருக்குப் பாராட்டு!

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி வாரியத் தோ்வில் விழுப்புரம் இ.எஸ். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் எம்.சூா்யபிரகாஷ் முதலிடம் பெற்றுள்ளாா். இந்த மாணவருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை பாராட்டுத்... மேலும் பார்க்க

விழுப்புரம் அரசுக் கல்லூரியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு கூட்டம்

விழுப்புரம் அறிஞா் அண்ணா கலைக் கல்லூரி, போதைப் பொருள் எதிா்ப்பு மன்றத்தின் சாா்பில் விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இளைஞா்களை போதைப் பொருள்கள் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் தமிழ... மேலும் பார்க்க