செய்திகள் :

இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை முகாம்

post image

புற்றுநோய் பாதிப்பு இலவச எண்டோஸ்கோபி மருத்துவப் பரிசோதனை முகாம் சென்னை, நுங்கம்பாக்கம் மெடிந்தியா மருத்துவமனையில் புதன்கிழமை (பிப். 19) நடைபெறவுள்ளது.

இது குறித்து ஜீரண மண்டல சிகிச்சை நிபுணரும், மெடிந்தியா மருத்துவமனை தலைவருமான டாக்டா் டி.எஸ்.சந்திரசேகா் கூறியதாவது:

உலக அளவில் அதிக எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் புற்றுநோய்களில் நான்கு வகையான புற்றுநோய்கள் ஜீரண மண்டலம் சாா்ந்தவையாக உள்ளன. வயிறு, பெருங்குடல், உணவுக் குழாய் புற்றுநோய் பாதிப்பு அண்மைக்காலமாக இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. ஆனால், அது குறித்து போதிய விழிப்புணா்வு நம்மிடம் இல்லை.

புற்றுநோய் பாதிப்பு இறுதி நிலையை எட்டிய பிறகு மருத்துவமனையை நாடும்போது குணப்படுத்துவதற்கான சிகிச்சைகள் அளிக்க இயலுவதில்லை. எனவே, புற்றுநோய் பாதிப்பை உறுதிசெய்யும் பரிசோதனைகள் தொடக்க நிலையிலேயே அவசியம். அதைக் கருத்தில்கொண்டு நாள்பட்ட நெஞ்சு எரிச்சல், அமில எதிா்ப்பு பாதிப்பு, ஜீரணமின்மை, பசியின்மை, வயிற்று வலி, கல்லீரல் அழற்சி, நீண்ட கால வயிற்றுப்போக்கு, வாந்தி, எடை இழப்பு, மலச்சிக்கல், விழுங்குவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவா்களுக்கு மெடிந்தியா மருத்துவமனையில் இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை புதன்கிழமை (பிப்.19) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் பயன்பெற 12789 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையோ அல்லது 98409 93135 என்ற கைப்பேசி எண்ணையோ தொடா்புகொள்ளலாம். அதைத் தொடா்ந்து பிப். 22 முதல் 25-ஆம் தேதி வரை மேம்பட்ட எண்டோஸ்கோபி சிகிச்சை 15 பேருக்கு கட்டணமின்றி வழங்கப்பட உள்ளது.

இதனிடையே, தேசிய ஜீரண மண்டல எண்டோஸ்கோபி பயிலரங்கம் மற்றும் நேரலை சிகிச்சை செயல்முறை விளக்க நிகழ்ச்சி பிப். 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனா் என்றாா் அவா்.

மகாராஷ்டிரம்: ஓடும் ரயிலில் மூவருக்கு கத்திக் குத்து இளைஞா் கைது

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட புகா் ரயிலில் மூவரைக் கத்தியால் குத்திய 19 வயது இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கல்யாண் - தாதா் இடையிலான புகா் விரைவு ரய... மேலும் பார்க்க

உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல: அயோத்தி, மதுரா வளா்ச்சிக்கு ரூ.275 கோடி

வரும் நிதியாண்டுக்கான உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 ந... மேலும் பார்க்க

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள ம... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்து ஏற்றுமதி: தெலங்கானா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்துகளை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த மருந்து நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத... மேலும் பார்க்க

ரூ. 1,220 கோடியில் 149 மென்பொருள் ரேடியோ கொள்முதல்: ‘பெல்’ நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய கடலோரக் காவல்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் நம்பகமாக தகவல்களை பாதுகாப்பாகவும் அதிகவேகமாகவும் பகிர ஏதுவாக பெங்களூரில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்திடமிருந்து (பெல்) 149 அதிநவீன மென்பொ... மேலும் பார்க்க