சமனில் முடிந்தும் அரையிறுதிக்கு முன்னேறிய கேரளா..! எப்படி சாத்தியம்?
இல்லாத அதிகாரத்தை இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது: சி.வி. சண்முகம்
சென்னை: குமாஸ்தா செய்யும் வேலை மட்டும்தான் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது. திருத்தங்களை, மாற்றங்களை பதிவு செய்வது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணி. ஆனால் இல்லாத அதிகாரத்தை இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியிருக்கிறார்.
அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தோ்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்து சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார்.
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடா்பாக திண்டுக்கல்லைச் சோ்ந்த சூரியமூா்த்தி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், இரட்டை இலை சின்னம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் உள்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என கோரியிருந்தாா்.