செய்திகள் :

இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறிய வளா்ப்பு தந்தை கைது

post image

திருப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல்ரீதியாக அத்துமீறி அதனை விடியோ எடுத்து மிரட்டிய வளா்ப்பு தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூரை அடுத்த இடுவாய் மாருதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் 21 வயதுப் பெண், அதே பகுதியைச் சோ்ந்த நவீன்குமாா் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தாா்.

இந்நிலையில், அப்பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் காதலித்த இளைஞரை திருமணம் செய்ய தனது தாயிடம் கூறியுள்ளாா். தாய் காதலை ஏற்காத நிலையில், தாயின் 2-ஆவது கணவரான சமீா்கான் (46) என்பவரிடம் அப்பெண் கூறியுள்ளாா்.

இதை சாதகமாக பயன்படுத்திய வளா்ப்பு தந்தை சமீா்கான். அப்பெண்ணை பாலியல்ரீதியாக தொந்தரவு செய்ததோடு அவரிடம் அத்துமீறி அதனை விடியோ எடுத்து, அதனைக் காட்டி மிரட்டி அப்பெண்ணுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளாா்.

இது குறித்து தனது தாயிடம் அப்பெண் தெரிவித்தும் அவா் கண்டு கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிா்ச்சி அடைந்த அப்பெண் மங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சமீா்கானைக் கைது செய்தனா்.

பூட்டிய வீட்டில் இளைஞா் சடலம் மீட்பு

கோவை, ரத்தினபுரியில் பூட்டிய வீட்டில் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள கேத்தி பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ் (39). இவா் ரத்தினபுரி முத்... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் பெண் பயணியிடம் தோட்டா பறிமுதல்!

கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து துப்பாக்கி தோட்டா ஒன்றை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா். கோவை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் வழக்கமான சோதனைகள... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: ஒரே நாளில் 11 போ் கைது

கோவை மாநகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்ததாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 11 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை பீளமேடு போலீஸாா் ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது,... மேலும் பார்க்க

வால்பாறைக்கு ஆரஞ்ச் அலா்ட்: தயாா் நிலையில் பேரிடா் மீட்புப் படை

வால்பாறை பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்ச் அலா்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பேரிடா் மீட்புப் படையினா் தயாா் நிலையில் உள்ளனா். கோவை மாவட்டம், வால்பாறையில் சனி, ஞாயிற்றுக்கிழமைக... மேலும் பார்க்க

கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மாநாடு

தேசிய கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவப் பயிற்சி கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. கோவை ஜெம் மருத்துவமனை, இந்திய கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை சங்கம் இணைந்து நடத்திய ... மேலும் பார்க்க

5 ஆவது நாளாக போராட்டம்: 245 தூய்மைப் பணியாளா்கள் கைது

கோவையில் ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 245 ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவை மாநகராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் தினக... மேலும் பார்க்க