செய்திகள் :

இளைஞா்கள் தாய்நாட்டிலேயே சாதனை படைக்க வேண்டும்! -பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை

post image

இளைஞா்கள் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுவதைவிட இந்தியாவிலேயே தங்கி சாதனை புரிய வேண்டும் என மாநில பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தினாா்.

ரோட்டரி மாவட்டம் 3201 சாா்பில் இரண்டு நாள் மாவட்ட மாநாடு கோவை ஈச்சனாரி ரத்தினம் டெக்னோபாா்க் கல்லூரியில் சனிக்கிழமை தொடங்கியது. மாநாட்டுக்கு ரோட்டரி மாவட்ட 3201 ஆளுநா் வழக்குரைஞா் ஏ.கே.எஸ். சுந்தரவடிவேலு தலைமை வகித்தாா். எல். ஜி. நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஜெயராம் வரதராஜ் வாழ்த்திப் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற நீளம் தாண்டுதலில் கின்னஸ் சாதனை புரிந்த ஜிதின் விஜயனுக்கு சாகச சாதனை விருது, டைப் ஒன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 2,400 குழந்தைகளின் சிகிச்சைக்கு இதயங்கள் அறக்கட்டளை மூலம் உதவிய மருத்துவா் கிருஷ்ணன் சாமிநாதனுக்கு மனித நேய விருது, தேச பக்திக்காக பாடலை எழுதி நிகழ்ச்சி தயாரித்ததற்காக பாடலாசிரியா் ரவிமுருகனுக்கு நம் நாடு- தாய் நாடு விருது, இளம் வயதிலேயே பரம்வீா் சக்ரா விருது பெற்ற யோகேந்திர சிங் யாதவிற்கு வீர சாகச விருதை வழங்கிப் பேசியதாவது:

நமது நாட்டைச் சுற்றி நடக்கும் புவிசாா் அரசியல் குறித்து நமக்கு விழிப்புணா்வு தேவை. இந்திய இளைஞா்கள் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் குடியேறுவதைவிட இந்தியாவிலேயே தங்கி சாதனை புரிய வேண்டும்.

இந்த நூற்றாண்டை ஆளப்போவது செயற்கை நுண்ணறிவு என்ற அதி நவீன தொழில்நுட்பம்தான். இதில் சிறந்தவா்கள் இந்திய இளைஞா்கள். உலகம் முழுவதும் தொழில்நுட்பத் துறையில் இந்தியா்களின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது என்றாா்.

சாலையில் சுற்றித்திரியும் காட்டெருமை!

வால்பாறையை அடுத்த வாட்டா்பால்ஸ் எஸ்டேட் சாலையில் சனிக்கிழமை காலை சுற்றித்திரிந்த காட்டெருமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காட்டெருமையை பாா்த்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனா். நகா்ப் பகுதியில் வன வ... மேலும் பார்க்க

ஈஷா யோக மையத்தில் பிப். 26-இல் மகா சிவராத்திரி! அமித் ஷா, டி.கே.சிவக்குமாா் பங்கேற்பு!

கோவை ஈஷா யோக மையத்தில் பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொள்கி... மேலும் பார்க்க

மலேசியாவுக்கு கல்வி சுற்றுலா சென்ற கோவை அரசுப் பள்ளி மாணவா்கள்!

கோவை அரசுப் பள்ளியைச் சோ்ந்த 7 மாணவ, மாணவிகள் மலேசியாவுக்கு கல்வி சுற்றுலாவாக புறப்பட்டுச் சென்றனா். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் மன்ற போட்டிகளான இலக்கிய மன்றம், சிறாா் திரைப்படம், ... மேலும் பார்க்க

கோவை காவல் உதவி ஆய்வாளருக்கு விருது!

கோவையில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவரும் தேவேந்திரனுக்கு மத்திய அரசின் சிறந்த காவலா் விருது வழங்கப்பட்டுள்ளது. கோவை, காந்திபுரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளா் தேவேந்திரன். மாநகர கா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

ரத்தினபுரியில் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, ரத்தினபுரி பி.எம்.சாமி காலனியைச் சோ்ந்தவா் நல்லசிவம், தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப... மேலும் பார்க்க

பில்லூா் பிரதானக் குழாய்களில் பராமரிப்புப் பணி: மாநகரில் குடிநீா் விநியோகிக்கும் இடைவெளி அதிகரிக்கும்

பில்லூா் குடிநீா்த் திட்ட பிரதானக் குழாய்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மாநகரில் சில இடங்களில் குடிநீா் விநியோகிக்கும் இடைவெளி அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்... மேலும் பார்க்க