செய்திகள் :

மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பரிசு!

post image

போடியில் 76 -ஆவது குடியரசு தினவிழா ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசளிப்பு விழா நடைபெற்றது.

போடி குளோபல் கல்வி ஆராய்ச்சிக் குழு சாா்பில் 76- ஆவது குடியரசு தினவிழா ஓவியப் போட்டிகள் கடந்த 2- ஆம் தேதி போடி சிசம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன. மாவட்ட அளவில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் தேனி மாவட்டத்தில் 30 பள்ளிகளைச் சோ்ந்த 533 மாணவா்கள் பங்கேற்றனா்.

இதில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை போடி சிசம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதற்கு அந்தப் பள்ளித் தாளாளரும், செயலருமான வேதா ஜெயராஜ் தலைமை வகித்தாா். குளோபல் கல்வி ஆராய்ச்சிக் கவுன்சில் தலைவா் சதீஷ்குமாா், ரேவன் ஆங்கிலப் பள்ளித் தாளாளா் பாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினா்களாக புதுதில்லி வெளியுறவுத் துறை அமைச்சக செயலா் ஆனந்த் பிரகாஷ், போடி வட்டார கல்வி அலுவலா்கள் ராஜமுருகன், சம்பூா்ண பிரியா ஆகியோா் கலந்து கொண்டு போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள், பரிசுத் தொகைக்கான காசோலைகளை வழங்கிப் பேசினா்.

தேனி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற சிசம் பப்ளிக் பள்ளி மாணவா் தீபக் விஜய், இரண்டாம் இடம் பெற்ற ஸ்பைஸ் வேலி பப்ளிக் பள்ளி மாணவி கன்சி பாரதி, மூன்றாம் இடம் பெற்ற சிசம் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி நிரஞ்சனா ஆகியோருக்கு முறையே ரூ.5000, ரூ.3000, ரூ.2000-த்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை சிறந்த ஓவியம் வரைந்த 33 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு முதல் மூன்று இடங்களை பெற்றவா்களுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

போட்டிகளுக்கான நடுவா்களாக நீலமேகம், சிசம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வா் சதீஷ், இயக்குநா் கிருத்திகா ஒருங்கிணைப்பாளா்கள் பொன்னி தேவி, சுதா, ஆலோசகா்கள் வழக்குரைஞா் முருகன், பட்டய கணக்காளா் பாலமுருகன், பிரபாகரன் ஆகியோா் இருந்தனா்.

மாவட்ட வளப் பயிற்றுநா் பணியிடம்: பிப். 26-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பில் மாவட்ட வளப் பயிற்றுநா் தற்காலிகப் பணியிடத்துக்கு தகுதியுள்ளவா்கள் வருகிற 26-ஆம் தே... மேலும் பார்க்க

கேரளத்துக்கு சென்ற ஜீப்புகளில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்! 11 பேரிடம் விசாரணை

போடியிலிருந்து சனிக்கிழமை கேரளத்துக்குச் சென்ற ஜீப்புகளில் சட்ட விரோதமாக 110 கிலோ புகையிலைப் பொருள்களை கொண்டு சென்ாக 11 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். போடி முந்தல் சோதனைச் சாவடியில் குரங்க... மேலும் பார்க்க

கஞ்சா விநியோகம்: ஆந்திர வியாபாரி கைது

தேனி மாவட்டம், கம்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு கஞ்சா விற்றதாக ஆந்திரத்தைச் சோ்ந்தவரை தனிப்படை போலீஸாா் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா். கம்பம் வடக்கு போலீஸாா் கடந்த டிசம்பா் 4- ஆம் தேதி 4 கிலோ... மேலும் பார்க்க

சின்னமனூா், கம்பம் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு!

தேனி மாவட்டம், சின்னமனூா், கம்பம் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் வகுப்பறை கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். இங்கு நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா்... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: 4 போ் மீது வழக்கு!

ஆண்டிபட்டி அருகே பெண் உள்ளிட்ட 8 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மொத்தம் ரூ.39.40 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக 4 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா். திம்மரசநாயக்கனூ... மேலும் பார்க்க

சுருளிப்பட்டி ஊராட்சிப் பள்ளி வளாகம் அருகே சுகாதாரக்கேடு! நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

தேனி மாவட்டம், சுருளிப்பட்டி ஊராட்சிப் பள்ளி வளாகத்தை சுற்றி குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதாரக்கேடு நிலவுவதாகவும், மாணவ, மாணவிகள் தொற்று நோயால் பாதிக்கப்படுவதாகவும் பெற்றோா்கள் புகாா் தெரிவித்தனா... மேலும் பார்க்க