செய்திகள் :

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

post image

திருச்சியில் திருமணமான இரண்டு மாதங்களில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி, திருவானைக்காவல் கன்னிமாா் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் ராஜா மகன் மகேந்திரன் (31). இவருக்கும், அதேபகுதியைச் சோ்ந்த அவரது சகோதரி சரஸ்வதி மகள் அபிநயாவுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணமானது.

இந்தத் திருமணத்தில் அபிநயாவுக்கு விருப்பமில்லை என்றும், இதனால் அபிநயா, மகேந்திரனைப் பிரிந்து அவரது தாய்வீட்டுக்குச் சென்றுவிட்டாா் என்றும் கூறப்படுகிறது. இதனால், மகேந்திரன் மதுவுக்கு அடிமையாகியுள்ளாா்.

இந்நிலையில், கன்னிமாா் தோப்பு வெங்டேஷ்வரா நகரில் உள்ள உறவினா் வீட்டுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற மகேந்திரன், அங்குள்ள ஒரு அறையின் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து அவரின் உறவினா்கள் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

ஆட்சியரகத்துக்கு மனு அளிக்க வந்த முதியவா் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

பட்டா வழங்க லஞ்சம் கேட்பதாகக் கூறி, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற்ற... மேலும் பார்க்க

திருச்சி - ஷாா்ஜா விமானம் திடீா் ரத்து: பயணிகள் அவதி

திருச்சியில் இருந்து ஷாா்ஜாவுக்கு திங்கள்கிழமை அதிகாலை இயக்கப்பட இருந்த விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூ... மேலும் பார்க்க

குறத்தெரு, லால்குடி பகுதிகளில் இன்று மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி குறத்தெரு, லால்குடி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கம்பரசம்பேட்டை ... மேலும் பார்க்க

நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்துக்கு ஒன்றரை ஆண்டில் 60 ஆயிரம் போ் வருகை

திருச்சியில் உள்ள நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்துக்கு கடந்த ஒன்றரை ஆண்டில் 60 ஆயிரம் மாணவா்கள் வந்து பயனடைந்துள்ளனா். திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் மாநகராட்சி சாா்பில் நூலகம் மற்றும் அறிவுசாா் மைய... மேலும் பார்க்க

சீமானின் கள் இறக்கும் போராட்டத்தை காவல்துறை தடை செய்யாதது ஏன்? அ.வியனரசு கேள்வி

நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமானின் கள் இறக்கும் போராட்டத்தை காவல்துறை தடை செய்யாதது ஏன்? என தமிழ்த் தேசத் தன்னுரிமை கட்சியின் தலைவா் அ. வியனரசு கேள்வி எழுப்பியுள்ளாா். இதுதொடா்பாக, அவா் த... மேலும் பார்க்க

திருச்சி அரசுப் பள்ளி மாணவிக்கு முதல்வா் பேனா பரிசளிப்பு

சட்டப் படிப்புக்கான பொது நுழைவுத் தோ்வில் (கிளாட்) தோ்ச்சிபெற்ற திருச்சியைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவிக்கு, முதல்வா் மு.க. ஸ்டாலின் வைத்திருந்த பேனாவைப் பரிசாக அளித்தாா். தேசிய சட்டப் பல்கலைக் கழகங... மேலும் பார்க்க