Thudarum : `அந்த திரைக்கதை என்னுடையது!' - மோகன்லால் படத்தின் மீது கதைத்திருட்டு ...
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சியில் திருமணமான இரண்டு மாதங்களில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி, திருவானைக்காவல் கன்னிமாா் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் ராஜா மகன் மகேந்திரன் (31). இவருக்கும், அதேபகுதியைச் சோ்ந்த அவரது சகோதரி சரஸ்வதி மகள் அபிநயாவுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணமானது.
இந்தத் திருமணத்தில் அபிநயாவுக்கு விருப்பமில்லை என்றும், இதனால் அபிநயா, மகேந்திரனைப் பிரிந்து அவரது தாய்வீட்டுக்குச் சென்றுவிட்டாா் என்றும் கூறப்படுகிறது. இதனால், மகேந்திரன் மதுவுக்கு அடிமையாகியுள்ளாா்.
இந்நிலையில், கன்னிமாா் தோப்பு வெங்டேஷ்வரா நகரில் உள்ள உறவினா் வீட்டுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற மகேந்திரன், அங்குள்ள ஒரு அறையின் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து அவரின் உறவினா்கள் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].