செய்திகள் :

இளைய காமராசர் என அழைக்க வேண்டாம்: விஜய்

post image

தன்னை இளைய காமராசர் என அழைக்க வேண்டாம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய், மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக விருது வழங்கிப் பாராட்டி வருகிறார்.

முதல்கட்டமாக மே 30, இரண்டாம் கட்டமாக ஜூன் 4 பரிசளிப்பு விழா நடைபெற்ற நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள விடுதியில் இன்று மூன்றாம் கட்ட நிகழ்வு நடைபெறுகிறது.

இந்த நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய், குஜராத் விபத்தின் புகைப்படங்கள், விடியோக்களை பார்ப்பதற்கு மனம் பதறுகிறது, அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, குஜராத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து, மீண்டும் பெற்றோர்கள், மாணவர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய், தன்னை இளைய காமராசர் என்று அழைக்க வேண்டாம், 2026 தேர்தல், அரசியல் பற்றியெல்லாம் இந்த மேடையில் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

மேலும், தங்களின் பள்ளி, ஆசிரியர்கள் பற்றி பேசுங்கள் என்று கோரிக்கை வைத்தார்.

இதையும் படிக்க : ஆமதாபாத்தில் மோடி! பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்!

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு பொறுப்பற்ற செயல்: முதல்வர் ஸ்டாலின்

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு பொறுப்பற்ற செயல் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், ஈரான் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல்கள் பெரு... மேலும் பார்க்க

நீட் தேர்வுக்கெதிரான பொய் பிரசாரங்களை திமுக இனியாவது நிறுத்த வேண்டும்: அண்ணாமலை

நீட் தேர்வுக்கெதிரான பொய் பிரசாரங்களை திமுக இனியாவது நிறுத்த வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், நீட் தேர்வில், தமிழகத்தில் தேர்வெ... மேலும் பார்க்க

கூட்டணி ஆட்சி; ஆனால் முதல்வர் இபிஎஸ்தான்! - நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் எங்களுடைய ஆட்சி கூட்டணி கட்சிகளின் ஆட்சியாக இருக்கும் என்றும் அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருவாரூரில் செய்திய... மேலும் பார்க்க

பெரம்பூர் சாலையில் 6 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம்! மெட்ரோ பணிகள் காரணமா?

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ பணிகளால் 6 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெரம்பூர் ந... மேலும் பார்க்க

வயது வந்தோருக்கான எழுத்தறிவு: 5 லட்சம் தேர்ச்சி! தமிழகம் முதலிடம்

வயது வந்தோருக்கான எழுத்தறிவு திட்டத்தின் கீழ் படித்து, 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.எழுத்தறிவு பெறும் திட்டத்தி... மேலும் பார்க்க

81 லட்சம் பேருக்கு உதவிய முதல்வர் காப்பீட்டுத் திட்டம்!

முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 81 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனுற்றதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான 4 ஆண்டுகால ஆட்சியில், முதல்வரின் வ... மேலும் பார்க்க