செய்திகள் :

இஸ்ரேல் - ஈரானுக்கு இடையே தொடரும் தாக்குதல்கள்; யாருக்கு எவ்வளவு பாதிப்புகள்?

post image

'ஆபரேஷன் ரைஸிங் லயன்' என்கிற பெயரில், கடந்த வியாழக்கிழமை (ஜூன் 12) நள்ளிரவில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. இதற்கு எதிர்வினையாக, இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதல் நடத்துகிறது.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியே, 'ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுப்பது' ஆகும். இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில், 'இஸ்ரேல் தனது உயிர் வாழ்தலுக்காகவும், தனக்கு இருக்கும் அச்சுறுத்தலை அகற்றுவதற்காகவும் இதை நடத்துகிறது' என்று குறிப்பிட்டிருந்தார்.

ஈரானின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம், எண்ணெய்க் கட்டமைப்புகள், ஈரானின் அணு ஆயுதத் திட்டம் சம்பந்தமான பகுதிகள் என ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கிட்டத்தட்ட 100 பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி உள்ளது.

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்கள்
இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்கள்

இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த முப்படைத் தளபதி, அணு ஆயுத ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 78 பேர் உயிரிழந்துள்ளனர், 320-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று ஈரான் இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கு பதிலடி தருவதுபோல, இன்று காலை முதல் ஈரான் இஸ்ரேலின் எனர்ஜி கட்டமைப்புகள், மக்கள் வாழும் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல், ஈரான் இஸ்ரேல் மீது நடத்தி வரும் தாக்குதலில் கிட்டத்தட்ட 9 பேரும், 300-க்கு மேற்பட்டோரும் காயமடைந்துள்ளனர் என்று இஸ்ரேல் கூறுகிறது.

ஈரானின் இந்தத் தாக்குதல்களால் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் பகுதிகளில் சைரன்கள் மூலம் இஸ்ரேல் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இப்படி இரு நாடுகளும் தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டிருந்தால் நிச்சயம் இது பிற உலக நாடுகளையும் பாதிக்கும்.

'தமிழ்நாட்டில் 18 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி; பீகாரில் 30 லட்சம்..!' - திடீர் சர்ச்சையின் பின்னணி

இந்த ஆண்டு நவம்பர் மாதம் பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலுக்கான பிரசாரங்கள் பீகாரில் சூடு பிடித்து வருகிறது. இந்த நிலையில், பாஜக கூட்டணியில் இருக்கும் ரா... மேலும் பார்க்க

`சீமானின் சட்டவிரோத கள் இறக்கும் போராட்டத்தை தடை செய்ய காவல்துறை தவறியது ஏன்?’ - டாக்டர் கிருஷ்ணசாமி

"கள் இறக்க அனுமதி இல்லை என அறிந்தும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பெரியதாழையில் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 'கள்' இறக்க அனுமதித்தது ஏன்?" என்று புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழ... மேலும் பார்க்க

`தந்தை அம்பேத்கர், 'பிரதமர் பதவியை கைப்பற்றுங்கள்' என்று தான் வழிகாட்டியிருக்கிறார்’ - திருமாவளவன்

திருச்சியில் சனிக்கிழமை மாலை 'மதசார்பின்மை காப்போம்' என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் டி.வி.எஸ் பகுதியில் இருந்து திருச்சி மாநகராட்சி அலுவலகம் வரை 3 கிலோ... மேலும் பார்க்க

Israel - Iran : `இந்தியா பாகிஸ்தானை போல ஈரான் இஸ்ரேலும்...’ - சொன்னதையே சொல்லும் ட்ரம்ப்

ஜூன் 13 அன்று, இஸ்ரேல் 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் ஈரானில் உள்ள நடான்ஸ், கோண்டாப், கோர்ராமாபாத்தில் உள்ள அணுசக்தி நிலையங்கள், இராணுவ தளங்கள், ஏவுகணை உற்பத்தி தளங்கள் ஆகிய170 க்கும் மேற்பட்ட இடங... மேலும் பார்க்க

'ட்ரம்ப் பார்ட்னர் நான்' - ட்ரம்பை கொல்ல இருமுறை ஈரான் முயற்சியா? - நெதன்யாகு குற்றச்சாட்டு என்ன?

இஸ்ரேல் - ஈரான் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. நேற்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஃபாக்ஸ் நியூஸ் செய்தி சேனலுக்கு நேர்காணல் ஒன்றை தந்துள்ளார். அதில் அவர் அமெரிக்க அதிபர் ட்ரம்பை ஈரான் இரண்டு முற... மேலும் பார்க்க