செய்திகள் :

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்: நாட்டாமை செய்ய வந்த டிரம்ப்; ஈரான் கொடுத்த பதில்

post image

ஈரான் மீது இஸ்ரேல் 'முன்னெச்சரிக்கை தாக்குதல்' நடத்த தொடங்கி இன்றோடு நான்கு நாள் ஆகிறது. இந்தத் தாக்குதலுக்கு எதிர்வினையாக ஈரானும் இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை பொழிந்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'இந்தியா, பாகிஸ்தானைப் போல, இஸ்ரேல், ஈரானையும் ஒப்பந்தம் மேற்கொள்ள செய்வேன்' என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆனால் ஈரானோ, 'இஸ்ரேலின் முன்னெச்சரிக்கை தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தப்பின் தான், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வருவோம்' என்று இஸ்ரேல் - ஈரான் தாக்குதலில் மத்தியஸ்தம் செய்யும் ஓமன் மற்றும் கத்தாரிடம் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது.

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்
இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்

இந்த நான்கு நாள்கள் தாக்குதலில், இஸ்ரேலில் குறைந்தபட்சம் 230 பேர் உயிரிழந்திருப்பார்கள். இதில் 90 சதவிகிதம் பேர் சாதாரண மக்கள் என்று ஈரானின் சுகாதரத் துறை கூறியுள்ளது.

இஸ்ரேலில் ஈரானின் தாக்குதலால் கிட்டத்தட்ட 10 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில் குழந்தைகளும் அடக்கம்.

ஈரானுக்கு ஆதரவாக நேற்று ஏமனின் ஹவுத்திகளும் களம் இறங்கியிருந்தார்கள்.

ஈரானின் அணு ஆயுதத் திட்டத்திற்கு சம்பந்தமான இடங்களில் தான் இஸ்ரேல் பெரும்பாலும் குறிவைத்து இருந்தது. இதற்கு எதிர்வினையாக இஸ்ரேலில் ராணுவ தளவாடங்கள் மீது ஈரான் குறி வைத்து தாக்கி வருகிறது.

இந்தத் தாக்குதல்கள் விரைவில் முடிவுக்கு வந்தால் இஸ்ரேல், ஈரானுக்கு மட்டுமல்ல... மற்ற உலக நாடுகளுக்கும் நன்மை!

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்: தங்கம் முதல் பணவீக்கம் வரை பாதிப்பு.. இந்தியா யார் பக்கம்?

இந்தியாவிற்கும், இஸ்ரேலுக்கும் கிட்டத்தட்ட 2,500 கி.மீ தூரம்; இடையில் ஒரு நாடு...இந்தியாவிற்கு ஈரானுக்கும் கிட்டத்தட்ட 4,000 கி.மீ தூரம்; இடையில் நான்கு நாடுகள்!இருந்தாலும், இந்த இரு நாடுகளுக்கு இடையே... மேலும் பார்க்க

``பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் இஸ்ரேலை தாக்கும்'' - ஈரான் அதிகாரியின் கூற்றுக்கு பாகிஸ்தான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் வலுத்துவரும் நிலையில், ஈரானுடனான அனைத்து எல்லைகளையும் மூடுவதாக அறிவித்துள்ளது பாகிஸ்தான் அரசு. பாகிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் ஈரானுடன் எல்லையைப் பகிர்... மேலும் பார்க்க

Corona: கொரோனாவிற்கு பின் ஏற்பட்ட தூக்கக்கோளாறு, மூளை மூடுபனி பிரச்னை.. மீள்வது எப்படி?

2020 - 2021-ம் ஆண்டுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மக்கள் கொத்துக்கொத்தாய் மடிந்தது எல்லாம் இன்னும் கண்களில் இருந்து மறையவில்லை. மக்களின் சுய கட்டுப்பாடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பூசி போன்... மேலும் பார்க்க

`முதல்வர் ஸ்டாலின் வருகைக்கு எதிர்ப்பு' - கருப்பு கொடி காட்டி கரும்பு விவசாயிகள் போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருமண்டங்குடி கிராமத்தில் திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்தது. அப்பகுதி விவசாயிகளிடம் அந்த ஆலை கரும்பு கொள்முதல் செய்தது. கரும்பு கொடுத்த விவசாயி... மேலும் பார்க்க

``உச்ச நீதிமன்றத்தில் தமிழ் மொழியில் வாதாட நீதியரசர்கள் துணை நிற்க வேண்டும்'' - முதல்வர் ஸ்டாலின்

திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் மற்றும் மன்னார்குடி நகரச் செயலாளர் வீரா.கணேசன், இவரது தம்பி அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன் இல்ல திருமணம் தஞ்சாவூர் மஹாராஜா மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற... மேலும் பார்க்க

கல்லணை, ரோடு ஷோ, சிலை திறப்பு, நலத்திட்ட உதவி.. முதல்வரின் தஞ்சாவூர் விசிட்

கடந்த 12 - ம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் இருந்து முதல்வர் ஸ்டாலின் டெல்டா குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார். இந்நிலையில், தஞ்சையில் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ... மேலும் பார்க்க