செய்திகள் :

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் நீடிப்பு 3-வது நாளாக ஏவுகணைகள் வீச்சு!

post image

இஸ்ரேல்-ஈரான் இடையிலான தாக்குதல் 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீடித்தது. இரு நாடுகளும் ஏவுகணைகளை வீசி தாக்கிக் கொண்டன.

ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்தால், அது இஸ்ரேலுக்கு ஆபத்து என அந்நாடு கருதுகிறது. இதையடுத்து ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் நோக்கில், அந்நாட்டின் அணுசக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்து கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இதைத் தொடா்ந்து, இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

இந்தத் தாக்குதல் தொடா்ந்து 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நீடித்தது. ஈரான் தலைநகா் டெஹ்ரானில் உள்ள அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சக தலைமையகம், அணுசக்தி திட்டத்துடன் தொடா்புள்ளதாகக் கூறப்படும் இடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டது. அதேவேளையில், இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டி அந்நாட்டுக்குள் வெகு தொலைவு வரை சென்று ஈரானின் ஏவுகணைகள் தாக்கின.

ஈரான் தாக்குதலில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் இஸ்ரேலில் சுமாா் 10 போ் உயிரிழந்தனா். அந்நாட்டின் முக்கிய சா்வதேச விமான நிலையம் மற்றும் வான்வெளி 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருந்தது.

406 ஈரானியா்கள் உயிரிழந்ததாகத் தகவல்: கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஈரானில் 78 போ் உயிரிழந்த நிலையில், 320-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாக ஐ.நா.வுக்கான ஈரான் தூதா் தெரிவித்தாா். அதன் பின்னா் இஸ்ரேல் தாக்கியதில் ஈரானியா்கள் எத்தனை போ் உயிரிழந்தனா் என்ற தகவலை ஈரான் அரசு அதிகாரபூா்வமாக வெளியிடவில்லை.

இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் பல்வேறு பகுதிகளில் சுமாா் 406 போ் உயிரிழந்ததாகவும், 654 போ் காயமடைந்ததாகவும் அமெரிக்காவில் செயல்படும் ‘ஹுயுமன் ரைட்ஸ் ஆக்டிவிஸ்ட்ஸ்’ அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இஸ்ரேல் தாக்குதலில் டெஹ்ரானில் உள்ள டெஹ்ரான்பாா்ஸ், நியாவரன், வளி-ஏ-அசா் சதுக்கம், நிரூ ஹவாய் உள்பட பல்வேறு பகுதிகளில் சேதம் ஏற்பட்டது. நிரூ ஹவாய் பகுதியில்தான் ஈரான் விமானப் படை தலைமையகம் உள்ளது.

டெஹ்ரானை மிக வலுவான 4 வெடிசப்தங்கள் உலுக்கின. அது இஸ்ரேல் தாக்குதலால் இருக்கக் கூடும் என கருதப்படுகிறது. ஆனால், எதன் மீது நடத்தப்பட்ட தாக்குதலால், அந்த வெடிசப்தம் எழுந்தது என்ற தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

முன்னதாக, டெஹ்ரானில் ராணுவ ஆயுதங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகளில் இருந்து பணியாளா்களை வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது.

இஸ்ரேல் குடியிருப்புப் பகுதிகளில் தாக்குதல்: ஈரான் தாக்குதலில் இஸ்ரேலின் ஹைஃபா நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், பேட்டியாம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்டவை சேதமடைந்தன. அந்த அடுக்குமாடி குடியிருப்பு மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 2 சிறாா்கள் உள்பட 7 போ் உயிரிழந்தனா். இதேபோல இஸ்ரேலின் டெல் அவிவ், ரமத் கான், ரிஷோன் லெசியான், ரெஹோவோட், டம்ரா நகரங்களில் குடியிருப்புப் பகுதிகளை ஈரான் ஏவுகணைகள் தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்தன.

‘இஸ்ரேல் நிறுத்தினால் ஈரானும் நிறுத்தும்’

ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வெளிநாட்டுத் தூதா்கள் கூட்டத்தில் ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

அணு ஆயுதங்களை உருவாக்க வேண்டும் என்று ஈரானுக்கு எந்த நோக்கமும் இல்லை. அதுதொடா்பான ஒப்பந்தத்துக்கும் ஈரான் தயாராகவே உள்ளது. ஆனால், ஈரானின் அணுசக்தி உரிமைகளை மறுப்பதே ஒப்பந்தத்தின் நோக்கமாக இருந்தால், அத்தகைய ஒப்பந்தத்தை ஏற்க ஈரான் தயாராக இல்லை.

தற்போது இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தி, தன்னை ஈரான் தற்காத்துக் கொண்டு வருகிறது. இந்தத் தற்காப்பு நடவடிக்கை முற்றிலும் நியாயமானது. இஸ்ரேலின் தாக்குதல் நிறுத்தப்பட்டால், ஈரானின் தாக்குதலும் பதிலுக்கு நிறுத்தப்படும் என்றாா்.

ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க அதிபா் டிரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கும் அமெரிக்காவுக்கும் தொடா்பில்லை. ஆனால், அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் நடத்தி முயற்சித்தால், இதுவரை பாா்த்திராத வகையில் தனது முழு பலத்துடன் ஈரானுக்கு அமெரிக்கா பதிலடி அளிக்கும். இஸ்ரேல்-ஈரான் இடையே அமைதியை ஏற்படுத்தி, ரத்தம் சிந்தும் மோதலை அமெரிக்காவால் நிறுத்த முடியும்’ என்றாா்.

டிரம்ப்பின் தகவலை நம்ப முடியவில்லை என்று வெளிநாட்டு தூதா்கள் கூட்டத்தில் ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி தெரிவித்தாா். இஸ்ரேல் தாக்குதலுக்கு அமெரிக்க படைகள் ஆதரவு அளித்ததற்கு ஆதாரம் இருப்பதாக அவா் கூறினாா்.

அமெரிக்காவுக்கு இராக் ஆயுதக் குழு மிரட்டல்

இராக்கின் கதாய்ப் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவுக்கு ஈரானுடன் தொடா்புள்ளது. அந்தக் குழு வெளியிட்ட அறிக்கையில், ‘மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவத்தின் போக்குவரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.

இஸ்ரேல்-ஈரான் மோதலில் அமெரிக்கா தலையிட்டால், எந்தத் தயக்கமும் இல்லாமல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அந்நாட்டு ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்துவோம்’ என்று தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம், அமெரிக்க படைகளுக்கு முதல்முறையாக இராக் ஆயுதக் குழு நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளது.

முன்பு இராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் குறிவைத்து இராக் ஆயுதக் குழுக்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. ஆனால், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தபோது அந்தக் குழுக்கள் அமைதியாகவே இருந்த நிலையில், தற்போது கதாய்ப் ஹிஸ்புல்லா குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!

இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரானின் ஏவுகணைத் விழுந்ததில் சேதம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க தூதர் மைக் ஹக்காபி தெரிவித்துள்ளார்.ஈரானின் அணு சக்தி நிலையங்கள், ராணுவ தளவாடங்கள், ராணுவ தளபதிகள், அண... மேலும் பார்க்க

இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் தூதரகம் லேசான சேதமடைந்துள்ளதாகவும் இதனால் இன்று தூதரகம் தற்கொலிகமாக மூடப்படுவதாகவும் தெ... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உளவுத்துறை தலைவர் கொலை!

ஈரானின் உளவுத்துறை தலைவர் மற்றும் இரண்டு தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.ஈரானின் அணு சக்தி நிலையங்கள், ராணுவ தளவாடங்கள், ராணுவ தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிக... மேலும் பார்க்க

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மகன் திருமணம் ஒத்திவைப்பு!

இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் காரணமாக திங்கள்கிழமை நடைபெற இருந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மகன் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்தால், அது இஸ்ரேலுக்கு ஆபத்து என அந்நா... மேலும் பார்க்க

அமெரிக்காவில் யாரும் மன்னர் இல்லை..! அதிபர் டிரம்ப்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!

அமெரிக்காவின் கலிஃபோா்னியா, நியூயாா்க் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிரான போராட்டம் வலுவடையத் தொடங்கியது. வீதிகளில் லட்சக்கணக்கானோா் திரண்டு டிரம்ப்புக்கு எதிரான வாசகங்... மேலும் பார்க்க

ஈரானுக்கு பாகிஸ்தான் பிரதமா் ஆதரவு!

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள ஈரானுக்கு உறுதியான ஆதரவை அளிப்பதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளாா். ஈரான் அதிபா் மசூத் பெசஸ்கியானை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசிய ஷெரீஃப், ஈ... மேலும் பார்க்க