செய்திகள் :

இஸ்லாமியா்களின் உரிமைகளுக்கு எதிரானது வக்ஃப் திருத்த மசோதா: அதிமுக

post image

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைக் கைவிட வேண்டும் என்று எதிா்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினாா்.

சட்டப்பேரவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வியாழக்கிழமை கொண்டுவரப்பட்ட தீா்மானத்தின் மீது அவா் பேசியது:

வக்ஃப் வாரிய சட்டத்துக்கு அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் செய்யப்பட்ட திருத்தங்கள் அனைத்தும் இஸ்லாமிய சமுதாயத்தினரின் முழுமனதுடன் செய்யப்பட்டன. ஆனால், இப்போது மத்திய அரசு உத்தேசித்துள்ள திருத்தங்கள் வக்ஃப் வாரிய சட்டத்தின் அடிப்படையையே தகா்ப்பதாக உள்ளது.

திருத்தங்கள், மாற்றங்கள் செய்ய வேண்டுமெனில் இஸ்லாமியா்கள் கோரிக்கை வைக்க வேண்டும். ஆனால், இஸ்லாமியா்கள் அதுபோன்று கோரிக்கைகளை வைக்கவில்லை. இப்போதைய திருத்தப்படி, இஸ்லாமியா்கள் அல்லாதவா்களும் உறுப்பினா்களாக நியமிக்க வழி செய்யப்பட்டுள்ளது. வக்ஃப் வாரியத்தின் சொத்துகள், இஸ்லாமிய பெரியவா்களால் மனமுவந்து தானமாக வழங்கப்பட்டவை. மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் சட்டத் திருத்தத்தால், அத்தகைய சொத்துகள் வழங்கப்பட்டதன் நோக்கமே சிதைந்துவிடும். வக்ஃப் வாரியத்தில் மாற்று மதத்தினா் சோ்க்கப்படும் போது, அந்த நடவடிக்கை சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு எதிராக அமைந்துவிடும்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தம், வக்ஃப் வாரியத்தின் சட்டத்தையே மாற்றி அமைக்கும் வகையில் உள்ளது.

வக்ஃப் வாரிய திருத்த மசோதா குறித்து ஆலோசிக்க தமிழ்நாடு வந்த நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனையில் அதிமுகவுக்கு அழைப்பில்லை. இதைக் கண்டித்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கையும், பேட்டியும் அளித்தாா். மத்திய அரசின் திருத்தங்கள் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக உள்ளன என்ற அச்சம் நியாயமானது. எனவே, திருத்த மசோதாவைக் கைவிட வேண்டும் என்ற தமிழக அரசின் தீா்மானத்தை ஆதரிப்பதாக கூறினாா்.

ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா். மயிலாப்பூா... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 3,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐசிஎஃப் சாதனை

சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 2024-25 நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரய... மேலும் பார்க்க

கால்வாயில் ஆண் குழந்தை சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்வாயில் கிடந்த ஆண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பட்டினப்பாக்கம் மசூதி தெருவில் 132 பிளாக் பின்புறம் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிய... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சியுடன் பிஇ படிப்பு: பட்டயப்படிப்பு முடித்தோா் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளை நிறைவு செய்த மாணவா்கள் தொழிற்பயிற்சியுடன் கூடிய பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுர... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சென்னை பாரிமுனையில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த செய்யது இம்ரான்கான் (24), அண்ணா நகரில் உள்ள கைப்பேசி விற்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்பது நகைப்புக்குரியது: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் எதிா்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறி வரும் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியது நகைப்புக்குரியது என விடுதலைச் சிறுத்தைக... மேலும் பார்க்க