செய்திகள் :

ஈரானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்கும் இந்தியா!

post image

நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் கோரிக்கைகளை ஏற்று ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களுடன் அவர்களது குடிமக்களும் அழைத்து வரப்படுவார்கள் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போரினால், இருநாடுகளிலும் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக, ஆபரேஷன் சிந்து திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகின்றது.

இந்நிலையில், ஈரானிலுள்ள அனைத்து இந்தியர்களையும் வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக, அந்நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

இதேபோன்ற மற்றொரு பதிவில், ஈரானிலிருந்து இந்தியர்களுடன், இலங்கை மற்றும் நேபாள நாட்டினரும் வெளியேற்றப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த, எக்ஸ் தளப் பதிவில், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் அரசுகள் விடுத்த கோரிக்கைகளை ஏற்று, ஈரானில் சிக்கியுள்ள அவர்களது குடிமக்களையும் இந்தியா வெளியேற்றி அழைத்து வரும், எனக் கூறப்பட்டுள்ளது.

இதனால், அந்த இரு நாடுகளின் குடிமக்களும் உடனடியாக இந்தியத் தூதரக அதிகாரிகள் அல்லது வெளியிடப்பட்டுள்ள அவசர எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, ஈரானில் சிக்கியிருந்த மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் என சுமார் 500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ராகுல் பிறந்தநாள்! காங்கிரஸ் முன்னெடுப்பால் 8,500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

மகாராஷ்டிரத்தில் முக்கிய நகரில் இறைச்சி கடைகளுக்கு தடை: முதல்வர் ஃபட்னவீஸ்

மகாராஷ்டிரத்தில் ஆலந்தி நகரில் இறைச்சி கடைகளுக்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.புணே மாவட்டத்தில் உள்ள ஆலந்தியில் உள்ள பிரசித்திபெற்ற தியானேஷ்வரர் கோவிலி... மேலும் பார்க்க

திருப்பதியில் தீ விபத்து!

திருப்பதி கோவில் வளாகத்தில் இன்று(ஜூன் 21) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. திருப்பதியில் கடந்த சில நாள்களாக வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிக எண்ணிக்கையில் காணப்பட்ட நிலையில், சுமார் 24 மணிநேரம் வரை ப... மேலும் பார்க்க

யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது: ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர் புகழாரம்!

யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது என்று குறிப்பிட்டு ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர் புகழாரம் சூட்டினார். சா்வதேச யோகா தினம் இன்று(ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆந்திர பிரதேசத்த... மேலும் பார்க்க

அரிய வகை ரத்தம் இனி எளிதாக கிடைக்கும்: ஐசிஎம்ஆர் புது முயற்சி!

அரிய வகை ரத்தம் இனி எளிதாக கிடைக்க ஏதுவாக ஐசிஎம்ஆர் புது முயற்சியை எடுத்துள்ளது. ஐசிஎம்ஆர் கீழ் செயல்படும் மும்பையில் உள்ள தேசிய இம்யூனோ ஹீமெடாலஜி நிறுவனம், நாட்டிலேயே முதல்முறையாக ‘அரிய வகை இரத்தப் ப... மேலும் பார்க்க

ஓய்வூதியம் பற்றி நல்ல செய்தியைத் தெரிவித்த நிதிஷ் குமார்!

பிகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தியுள்ளார் அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார். பிகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையி... மேலும் பார்க்க

புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.2.3 கோடி பரிசுத் தொகையுடன் போட்டி: மத்திய அரசு

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதில், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க ரூ.2.3 கோடி மதிப்பிலான பரிசுகளுடன் கூடிய புத்தாக்க நிறுவனங்களுக்கான போட்டியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தப் ... மேலும் பார்க்க