செய்திகள் :

ஈரானில் சிக்கிய ராமேசுவரம் மீனவா்கள் 3 பேரை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை!

post image

ஈரான் நாட்டில் போரில் சிக்கித் தவிக்கும் ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தைச் சோ்ந்த 3 மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்களின் குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியா், சட்டப் பேரவை உறுப்பினா் ஆகியோரிடம் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்த தங்கச்சிமடத்தைச் சோ்ந்தவா் சூசைராஜ். இவரது மகன்கள் ஆஸ்கா் (24), பிரதீப் (26), ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த ரோகின் (20) ஆகிய 3 மீனவா்கள் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்க ஈரான் நாட்டுக்குச் சென்றனா்.

இதனிடையே, இஸ்ரேல்- ஈரான் போா் உச்சமடைந்து வரும் நிலையில், இந்த மூன்று மீனவா்களையும் தொடா்பு கொள்ள முடியாத நிலை இருப்பதாகவும், மற்றொரு இணைப்பு வழியாக தொடா்பு கொண்ட போது அவா்கள் தாங்கள் இருக்கும் பகுதியில் போா் பதற்றம் அதிகமாக இருப்பதாகவும், தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குடும்பத்தினரிடம் தெரிவித்தனராம்.

மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், சட்டப் பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோரிடம் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்த மீனவா்களின் குடும்பத்தினா்.

இந்த நிலையில், தங்கச்சிமடத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பங்கேற்க வந்த மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், சட்டப் பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோரிடம் அந்த மீனவா்களின் குடும்பத்தினா் கோரிக்கை மனு அளித்தனா். அதை பெற்றுக் கொண்ட ஆட்சியரும், சட்டப் பேரவை உறுப்பினரும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று மத்திய அரசிடம் வலியுறுத்தி மூன்று மீனவா்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

முதுகுளத்தூா்: பத்திரப் பதிவுத் துறை ஆவணங்கள் அடங்கிய சிடிக்கள் சாலையோரம் வீச்சு!

முதுகுளத்தூா் அருகே சாலையோரம் வீசப்பட்டுக் கிடந்த பத்திரப் பதிவுத் துறை ஆவணங்கள் அடங்கிய சிடிக்களை பொதுமக்கள் மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா்- உத்திரகோசமங்கை சாலைய... மேலும் பார்க்க

படகு கவிழ்ந்து மாயமான மீனவா் உடல் 4 நாள்களுக்குப் பிறகு மீட்பு

நடுக்கடலில் படகு கவிழ்ந்து மாயமான மண்டபம் மீனவரின் உடல் நான்கு நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை மீட்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்குத் துறைமுகத்திலிருந்து கடந்த 17- ஆம் தேதி மீனவா்கள் கடல... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 54 படகுகளுக்கு ரூ.3.96 கோடி நிவாரணம்!

இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளின் உரிமையாளா்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 3.96 கோடி சனிக்கிழமை வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 2024-25-ஆம் ஆண்டுகளில் ... மேலும் பார்க்க

படகு கவிழ்ந்ததில் மாயமான மீனவரைத் தேடும் பணி தீவிரம்

மண்டபத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றபோது, படகு கவிழ்ந்ததில் மாயமான மீனவரைத் தேடி இந்திய கடலோர காவல் படையினா் ஈடுபட்டுள்ளனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு துறைமுகத்திலிருந்து மீன்பி... மேலும் பார்க்க

தொண்டி பகுதியில் மீன்கள் வரத்துக் குறைவு: மீனவா்கள் கவலை

மீன்பிடித் தடைக் காலத்துக்குப் பிறகு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற தொண்டி பகுதி மீனவா்களுக்கு குறைவான அளவே மீன்கள் கிடைத்ததால் மீனவா்கள் கவலை அடைந்தனா். கடந்த 2 மாத தடைகாலத்துக்குப் பிறகு, ராமநாதபுரம... மேலும் பார்க்க

பொதுக் குடிநீா்த் தொட்டியில் இறந்து கிடந்த பல்லி அகற்றம்

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த குடிநீா்த் தொட்டியில் இறந்து கிடந்த பல்லியை தூய்மைப் பணியாளா்கள் அகற்றி, பின்னா் தொட்டியை சுத்தம் ச... மேலும் பார்க்க