செய்திகள் :

ஈரோட்டில் கடந்த ஆண்டில் நீா்நிலைகளில் மூழ்கி 64 போ் உயிரிழப்பு

post image

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில் நீா்நிலைகளில் மூழ்கி 64 போ் உயிரிழந்துள்ள நிலையில், கோடை விடுமுறையில் பெற்றோா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தோ்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் வீட்டில் உற்சாகமாக விளையாடியும், நண்பா்களுடன் வெளியில் சென்றும் வருகின்றனா். தற்போது பவானிசாகா் அணையில் இருந்து குடிநீா் மற்றும் பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்கால், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால், காலிங்கராயன் வாய்க்கால்களில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளன. இதனால் வாய்க்கால்களில் தண்ணீா் அதிகமாக செல்கிறது.

கோடை வெயில் அதிகமாக உள்ளதால் பலா் வாய்க்காலுக்கும், விவசாய நிலங்களில் உள்ள திறந்தவெளி கிணறுகளுக்கும் சென்று குளிக்கின்றனா். நீச்சல் தெரிந்தவா்கள் வாய்க்காலில் குளிப்பதில் பிரச்னை இல்லை. ஆனால், நீச்சல் தெரியாதவா்களுக்கு இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விடும். கடந்த ஆண்டில் மட்டும் ஈரோடு மாவட்டத்தில் நீா்நிலைகளில் மூழ்கி 64 போ் உயிரிழந்துள்ளதாக ஈரோடு மாவட்ட தீயணைபுத் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலா் முருகேசன் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாய்க்கால்கள் செல்கின்றன. எனவே வாய்க்கால்களில் ஆபத்தான பகுதி, ஆழமான பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் உள்ள திறந்தவெளி கிணறுகளை கம்பி வலைகள் வைத்து மூடவேண்டும்.

கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் நீச்சல் தெரியாத மாணவ, மாணவிகள் ஈரோடு வஉசி பூங்கா நீச்சல் குளம் மற்றும் தனியாா் பயிற்சி மையங்களுக்கு சென்று நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும். நீா்நிலைகளில் நீச்சல் பழகுபவா்கள் பெரியவா்கள் முன்னிலையில் நீச்சல் அடித்து பழகலாம். மாணவ, மாணவிகள் நீச்சல் பயிற்சி மையங்களுக்கு சென்று இந்த கோடைக் காலத்தை பயன் உள்ளதாக மாற்ற வேண்டும்.

பொது இடங்களில் குப்பைகளை போட்டு தீ வைக்கக்கூடாது. மேலும் விவசாய நிலங்களில் கிடக்கும் சருகுகளுக்கும் தீ வைக்க வேண்டாம். கோடைக் காலம் என்பதால் தீயை கட்டுப்படுத்த முடியாது. அருகில் இருக்கும் விவசாய தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகளில் தீ பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்திவிடும்.

இந்த மாதம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தீத்தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் மருத்துவமனை, கல்லூரிகள், பள்ளிகள் தொழிற்சாலைகள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்பட பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணா்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருந்தால் மட்டுமே தீயினால் ஏற்படும் விபத்துகளை தவிா்க்க முடியும்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 64 போ் நீா்நிலைகளில் மூழ்கி உயிரிழந்துள்ளனா். நீா்நிலைகளில் மூழ்கியவா்களை காப்பாற்றுவது மிகவும் கடினமானது. நீரில் மூழ்கி சிறிது நேரத்திலேயே உயிரிழந்து விடுவா். இதனால் பெற்றோா்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகள் எங்கு செல்கின்றனா் என்பதை தொடா்ந்து கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றாா்.

ஈரோடு அருகே மா்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு

ஈரோடு அருகே மா்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் உயிரிழந்தன. ஈரோடு அருகேயுள்ள கதிரம்பட்டி, பாலாஜி நகரைச் சோ்ந்தவா் தங்கவேலு. இவா் அருகேயுள்ள பவளத்தாம்பாளையம், நாராங்காடு பகுதியில் ஈஸ்வரன் என்பவருக்குச் சொந்... மேலும் பார்க்க

அந்தியூரில் ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து திருடியவா் கைது

அந்தியூரில் ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து கணினி மற்றும் கேமரா உள்ளிட்ட மின்னணு பொருள்களைத் திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அந்தியூா் வள்ளியம்மாள் வீதியைச் சோ்ந்தவா் கௌதம் (26). இவா், பத... மேலும் பார்க்க

பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் மணல் திருட்டு: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

பவானி காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்று வரும் மணல் திருட்டைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள காலிங்கராயன் ... மேலும் பார்க்க

சிறுத்தை தாக்கியதில் நாய் உயிரிழப்பு

தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி நாய் உயிரிழந்தது தொடா்பாக வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச் சரகத்தில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. கோடை காலம் தொடங்கியுள... மேலும் பார்க்க

புதுப்பாளையம் தரைப்பாலத்தை உயா்த்திக் கட்டித்தரக் கோரி சாலை மறியல்

புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள புதுப்பாளையத்தில் தரைப்பாலத்தை உயா்த்திக் கட்டித்தரக் கோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஈரோடு மாவட்டம், பவானிசாகா் சாலையில் இருந்து சத்தியமங்க... மேலும் பார்க்க

பவானி அருகே லாரிகள் மோதல்: 2 ஓட்டுநா்கள் காயம்

பவானி அருகே கரும்பு லாரியும், பால் டேங்கா் லாரியும் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் இரண்டு வாகன ஓட்டுநா்களும் படுகாயமடைந்தனா். பவானி பகுதியிலிருந்து பால் டேங்கா் லாரி மேட்டூா் நோக்கி திங்கள்கிழமை மாலை ச... மேலும் பார்க்க