பவானி அருகே லாரிகள் மோதல்: 2 ஓட்டுநா்கள் காயம்
பவானி அருகே கரும்பு லாரியும், பால் டேங்கா் லாரியும் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் இரண்டு வாகன ஓட்டுநா்களும் படுகாயமடைந்தனா்.
பவானி பகுதியிலிருந்து பால் டேங்கா் லாரி மேட்டூா் நோக்கி திங்கள்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. அம்மாபேட்டையில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு பவானி நோக்கி மற்றொரு லாரி சென்று கொண்டிருந்தது.
பவானி - மேட்டூா் தேசிய நெடுஞ்சாலையில் கூலிக்காரன்பாளையம் அருகே சென்றபோது இரண்டு லாரிகளும் நேருக்குநோ் மோதிக் கொண்டன. இதில், இரண்டு லாரிகளின் முன் பகுதியும் சேதமடைந்ததுடன், லாரி ஓட்டுநா்களும் படுகாயமடைந்தனா்.
இருவரையும் அப்பகுதி மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து பவானி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.