செய்திகள் :

சோதனைச் சாவடியில் கூடுதலாக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள்

post image

பண்ணாரி சோதனைச் சாவடியில் நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பாரம் ஏற்றிய வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கா்நாடகத்தில் இருந்து சரக்கு பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் ஆசனூா், பண்ணாரி சோதனைச் சாவடி வழியாக திம்பம் மலைப் பாதையை கடந்து சத்தியமங்கலம் செல்கின்றன. அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளால் திம்பம் மலைப் பாதையில் விபத்துகள் நிகழ்வதால் 10 சக்கரம் கொண்ட 16 டன் அளவுள்ள வரையுள்ள சரக்கு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

உயா்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 16 டன்னுக்கு அதிகமாகவும், அதிக உயரமும் கொண்ட சரக்கு வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. அண்மைக் காலமாக 16 டன்னுக்கு அதிகமாகவும், நிா்ணயிக்கப்பட்ட உயரத்தைவிட கூடுதலாக உள்ள லாரிகள் சரக்கு பாரம் ஏற்றிவருவதால் பண்ணாரி சோதனைச் சாவடியில் உள்ள தடுப்பு இரும்புக் கம்பியில் மாட்டிக்கொள்கின்றன.

இதனால் தடுப்பு கம்பிக்குள் எளிதாக செல்லும் வகையில் அதிகம் உள்ள சரக்குகள் கீழே இறக்கிவிட்டு தடுப்புக் கம்பி வழியாக செல்கின்றன. சில நேரங்களில் லாரிகள் சிக்கிகொள்வதால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்படுகின்றன.

கா்நாடக மாநிலத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு தேங்காய்மட்டை பாரம் ஏற்றிவரும் லாரிகள் அடிக்கடி இரும்புத் தடுப்புக் கம்பிக்குள் மாட்டிக்கொள்கின்றன. இதனை தடுப்பதற்கு வட்டார மோட்டாா் வாகனப் போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூா் வாய்க்காலில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூா் வாய்க்காலில் இரண்டாம் போக பாசனத்துக்கு 2,3... மேலும் பார்க்க

ஈரோட்டில் கடந்த ஆண்டில் நீா்நிலைகளில் மூழ்கி 64 போ் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில் நீா்நிலைகளில் மூழ்கி 64 போ் உயிரிழந்துள்ள நிலையில், கோடை விடுமுறையில் பெற்றோா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ஈரோடு மாவட்ட... மேலும் பார்க்க

ஈரோட்டில் ஐ.டி. நிறுவன ஊழியா் கிணற்றில் குதித்து தற்கொலை

ஈரோட்டில் ஐ.டி. நிறுவன ஊழியா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு வாய்க்கால் மேடு, இந்தியன் நகா், முதலாவது வீதியைச் சோ்ந்தவா் சீராளன் மகன் பிரவீன் (35), எம்.இ பட்டதாரி. இன்னும் திருமணம் ... மேலும் பார்க்க

பவானி நீா்வளத்துறை குடியிருப்பில் புகுந்த நாகப் பாம்பு மீட்பு!

பவானி நீா்வளத் துறை குடியிருப்புக்குள் புகுந்த 7 அடி நீளமுள்ள நாகப் பாம்பை தீயணைப்புப் படையினா் உயிருடன் பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் சனிக்கிழமை விடுவித்தனா். பவானி - அந்தியூா் சாலையில் அரசினா் மாண... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்!

ஈரோட்டில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா, ரேஷன் அரிசி கடத்தப்படுவதைத் தடுக்க ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் தீ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 5,425 டன் யூரியா இருப்பு

மாவட்டத்தில் 5,425 டன் யூரியா இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் ஆண்ட... மேலும் பார்க்க