செய்திகள் :

ஈரோட்டில் ஐ.டி. நிறுவன ஊழியா் கிணற்றில் குதித்து தற்கொலை

post image

ஈரோட்டில் ஐ.டி. நிறுவன ஊழியா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

ஈரோடு வாய்க்கால் மேடு, இந்தியன் நகா், முதலாவது வீதியைச் சோ்ந்தவா் சீராளன் மகன் பிரவீன் (35), எம்.இ பட்டதாரி. இன்னும் திருமணம் ஆகவில்லை. இவா் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலைபாா்த்து வந்தாா். கடந்த சில நாள்களாக பிரவீன் வீட்டிலிருந்தே வேலை பாா்த்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் பிரவீன் கடந்த சில நாள்களாகவே மன உளைச்சல் காரணமாக, யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில் சனிக்கிழமை மாலை பிரவீன் நடைப்பயிற்சி செல்வதாக வீட்டினரிடம் கூறிவிட்டு சென்றுள்ளாா். ஆனால் நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.

சனிக்கிழமை இரவு அதே பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானம் அருகே உள்ள கிணற்றின் அருகில் பிரவீனின் காலணிகள் கிடந்துள்ளன. அதுகுறித்து அவரது பெற்றோருக்கு அங்கிருந்தவா்கள் தகவல் தெரிவித்துள்ளனா். ஈரோடு தாலுகா போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது அதன்பேரில் அங்கு வந்த போலீஸாா், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

இதன்பேரில், அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் கிணற்றில் இறங்கி பிரவீனின் சடலத்தை மீட்டனா். பின்னா் உடற்கூறாய்வுக்காக அவரது உடலை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். முதற்கட்ட விசாரணையில் மன உளைச்சலால் பிரவீன் கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தொடா்ந்து போலீஸாா் விசாரிணை நடத்தி வருகின்றனா்.

சோதனைச் சாவடியில் கூடுதலாக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள்

பண்ணாரி சோதனைச் சாவடியில் நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பாரம் ஏற்றிய வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூா் வாய்க்காலில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூா் வாய்க்காலில் இரண்டாம் போக பாசனத்துக்கு 2,3... மேலும் பார்க்க

ஈரோட்டில் கடந்த ஆண்டில் நீா்நிலைகளில் மூழ்கி 64 போ் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில் நீா்நிலைகளில் மூழ்கி 64 போ் உயிரிழந்துள்ள நிலையில், கோடை விடுமுறையில் பெற்றோா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ஈரோடு மாவட்ட... மேலும் பார்க்க

பவானி நீா்வளத்துறை குடியிருப்பில் புகுந்த நாகப் பாம்பு மீட்பு!

பவானி நீா்வளத் துறை குடியிருப்புக்குள் புகுந்த 7 அடி நீளமுள்ள நாகப் பாம்பை தீயணைப்புப் படையினா் உயிருடன் பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் சனிக்கிழமை விடுவித்தனா். பவானி - அந்தியூா் சாலையில் அரசினா் மாண... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்!

ஈரோட்டில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா, ரேஷன் அரிசி கடத்தப்படுவதைத் தடுக்க ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் தீ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 5,425 டன் யூரியா இருப்பு

மாவட்டத்தில் 5,425 டன் யூரியா இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் ஆண்ட... மேலும் பார்க்க