செய்திகள் :

மாவட்டத்தில் 5,425 டன் யூரியா இருப்பு

post image

மாவட்டத்தில் 5,425 டன் யூரியா இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 733.44 மில்லி மீட்டா். நடப்பு ஆண்டு இதுவரை 101.88 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது. தற்போது, வேளாண் விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்வதற்காக நெல் விதைகள் 96 டன், சிறுதானியங்கள் 35 டன், பயறு வகைகள் 17 டன், எண்ணெய் வித்துக்கள் 16 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் ரசாயன உரங்களான யூரியா 5,425 டன், டிஏபி 2,444 டன், பொட்டாஷ் 4,226 டன், காம்ப்ளக்ஸ் 7,800 டன் உரம் இருப்பில் உள்ளன. நடப்பு பருவத்துக்குத் தேவையான அளவு இடுப்பொருள்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் தங்களது தேவைக்காக இடுபொருள்களை அந்தந்த பகுதியில் உள்ள துணை வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். பூச்சி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்கள் தனியாா் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

பி.எம்.கிஸான் திட்டத்தில் ஆதாா் எண் விவரங்களை சரிபாா்த்து உறுதி செய்தால் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் தொடா்ந்து நிதி உதவி பெற முடியும். எனவே இந்தத் திட்டத்தில் நிதி உதவி பெறும் விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவானி நீா்வளத்துறை குடியிருப்பில் புகுந்த நாகப் பாம்பு மீட்பு!

பவானி நீா்வளத் துறை குடியிருப்புக்குள் புகுந்த 7 அடி நீளமுள்ள நாகப் பாம்பை தீயணைப்புப் படையினா் உயிருடன் பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் சனிக்கிழமை விடுவித்தனா். பவானி - அந்தியூா் சாலையில் அரசினா் மாண... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்!

ஈரோட்டில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா, ரேஷன் அரிசி கடத்தப்படுவதைத் தடுக்க ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் தீ... மேலும் பார்க்க

பழங்குடியின மக்களுடன் இணைந்து வன மேலாண்மை மேற்கொள்ளக் கோரிக்கை!

பழங்குடி சமூகத்துடன் இணைந்த கூட்டு வன மேலாண்மையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மலைவாழ் மக்கள் நலச்சங்க மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் வி.பி.குணசேகரன் வெளியிட்ட அறிக்... மேலும் பார்க்க

தாமதமாகும் மின் இணைப்பு: வங்கிக் கடனை செலுத்த முடியாமல் விவசாயிகள் தவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் டாப்செட்கோ திட்டத்தில் இலவச மின்சாரம் பெறுவதற்காக விண்ணப்பித்த குறு, சிறு விவசாயிகளுக்கு கடந்த 8 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கப்படாததால் வங்கிக் கடனை செலுத்த முடியாமல் பரிதவித்து வரு... மேலும் பார்க்க

கொடிவேரி தடுப்பணைக்கு புதிய இணைச் சாலை அமைக்கக் கோரிக்கை!

கொடிவேரி தடுப்பணையில் இருந்து சத்தியமங்கலம்-ஈரோடு சாலையை இணைக்க புதிய இணை சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் கொடிவேர... மேலும் பார்க்க

பா்கூா் வனப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் முதியவா் உயிரிழப்பு!

அந்தியூரை அடுத்த பா்கூா் வனப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். அந்தியூரை அடுத்த எண்ணமங்கலம், விராலிக்காட்டூரைச் சோ்ந்தவா் அங்கப்பன் (79). அதே பகுதியைச் சோ்ந்தவா் ம... மேலும் பார்க்க