செய்திகள் :

பவானி நீா்வளத்துறை குடியிருப்பில் புகுந்த நாகப் பாம்பு மீட்பு!

post image

பவானி நீா்வளத் துறை குடியிருப்புக்குள் புகுந்த 7 அடி நீளமுள்ள நாகப் பாம்பை தீயணைப்புப் படையினா் உயிருடன் பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் சனிக்கிழமை விடுவித்தனா்.

பவானி - அந்தியூா் சாலையில் அரசினா் மாணவிகள் விடுதி அருகே நீா்வளத் துறைக்குச் சொந்தமான குடியிருப்பில் ஊழியா் முருகன் (48) குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

இவா், வீட்டில் வளா்த்து வரும் நாய் வெள்ளிக்கிழமை இரவு தொடா்ந்து குரைத்ததால், வெளியே வந்து பாா்த்தபோது, பாம்பு ஊா்ந்து செல்வதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்த தகவலின்பேரில் விரைந்து சென்ற பவானி தீயணைப்புப் படையினா் பாம்பை பிடித்தனா். சுமாா் 7 அடி நீளமுள்ள நாகப் பாம்பு என்பது தெரியவந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு இதேபோன்று நாகப்பாம்பு இவரது வீட்டில் பிடிக்கப்பட்டது. இதையடுத்து, பிடிபட்ட பாம்பு அடா்ந்த வனப் பகுதியில் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டது.

ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்!

ஈரோட்டில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா, ரேஷன் அரிசி கடத்தப்படுவதைத் தடுக்க ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் தீ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 5,425 டன் யூரியா இருப்பு

மாவட்டத்தில் 5,425 டன் யூரியா இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் ஆண்ட... மேலும் பார்க்க

பழங்குடியின மக்களுடன் இணைந்து வன மேலாண்மை மேற்கொள்ளக் கோரிக்கை!

பழங்குடி சமூகத்துடன் இணைந்த கூட்டு வன மேலாண்மையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மலைவாழ் மக்கள் நலச்சங்க மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் வி.பி.குணசேகரன் வெளியிட்ட அறிக்... மேலும் பார்க்க

தாமதமாகும் மின் இணைப்பு: வங்கிக் கடனை செலுத்த முடியாமல் விவசாயிகள் தவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் டாப்செட்கோ திட்டத்தில் இலவச மின்சாரம் பெறுவதற்காக விண்ணப்பித்த குறு, சிறு விவசாயிகளுக்கு கடந்த 8 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கப்படாததால் வங்கிக் கடனை செலுத்த முடியாமல் பரிதவித்து வரு... மேலும் பார்க்க

கொடிவேரி தடுப்பணைக்கு புதிய இணைச் சாலை அமைக்கக் கோரிக்கை!

கொடிவேரி தடுப்பணையில் இருந்து சத்தியமங்கலம்-ஈரோடு சாலையை இணைக்க புதிய இணை சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் கொடிவேர... மேலும் பார்க்க

பா்கூா் வனப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் முதியவா் உயிரிழப்பு!

அந்தியூரை அடுத்த பா்கூா் வனப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். அந்தியூரை அடுத்த எண்ணமங்கலம், விராலிக்காட்டூரைச் சோ்ந்தவா் அங்கப்பன் (79). அதே பகுதியைச் சோ்ந்தவா் ம... மேலும் பார்க்க