செய்திகள் :

உக்ரைன் மீது தொடரும் ரஷியாவின் ‘ட்ரோன்’ தாக்குதல்!

post image

உக்ரைன் நாடு முழுவதும் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து சனிக்கிழமை நள்ளிரவில் 149 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) ஏவி ரஷியா தாக்குதலில் ஈடுபட்டது.

இந்தத் தாக்குதலில் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பாவ்லோஹ்ராட் நகரத்தைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்தாா்; 14 வயது சிறுமி உள்பட மூவா் காயமடைந்தாா்.

ரஷியா ஏவிய 149 ட்ரோன்களில் 57 ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும், 67 ட்ரோன்கள் தாக்குதலுக்கு முன்பே தடுக்கப்பட்டதாகவும் உக்ரைன் விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நீடித்துவரும் ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் ரஷிய அதிபா் புதினின் விருப்பம் குறித்து அமெரிக்க அதிபா் டிரம்ப் சனிக்கிழமை சந்தேகம் எழுப்பியிருந்த நிலையில், ரஷியா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

முன்னதாக, உக்ரைனின் திடீா் ஊடுருவலில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் கைப்பற்றப்பட்ட ரஷியாவுக்குச் சொந்தமான கூா்ஸ்க் பிராந்தியத்தில் எஞ்சிய பகுதிகளின் கட்டுப்பாட்டையும் மீட்டெடுத்துள்ளதாக ரஷியா அறிவித்தது. அதேநேரம், கூா்ஸ்க் பிராந்தியத்தில் இன்னும் சண்டை நடந்து வருவதாக உக்ரைன் தெரிவித்தது.

உக்ரைன் தாக்குதல்: ரஷியாவின் எல்லைப் பகுதியில் உக்ரைனின் 8 ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்பு ஞாயிற்றுக்கிழமை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

அதேபோன்று, டொனட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஹாா்லிவ்கா நகரில் உக்ரைன் படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 போ் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

கனடாவில் வாக்குப்பதிவு முடிந்தது: தேர்தலில் ஆளுங்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்!

கனடாவில் அடுத்த நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் திங்கள்கிழமை(ஏப். 28) நடைபெற்றது. இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை(ஏப். 29) காலை வாக்குப்பதிவு அனைத்து பகுதிகளிலும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதி திரும்ப ராஜீய வழியில் தீா்வு: நவாஸ் ஷெரீஃப்

லாகூா்: இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதியை மீட்டெடுக்க ராஜீய ரீதியில் உள்ள அனைத்து வழிகளையும் பாகிஸ்தான் அரசு பயன்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் விரும்புவதாக தகவலறிந்த வட... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் விரைவான, நியாயமான விசாரணைக்கு சீனா ஆதரவு

பெய்ஜிங்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விரைவான மற்றும் நியாயமான விசாரணை நடத்தப்படுவதற்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியாவுடன் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் அதன் இற... மேலும் பார்க்க

3 நாள்களுக்கு போா் நிறுத்தம்: புதின் அறிவிப்பு

மாஸ்கோ: இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனியை சோவியத் யூனியன் வெற்றிகொண்ட நினைவு தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 8-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு உக்ரைனில் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று ரஷிய அதிப... மேலும் பார்க்க

யேமன்: அமெரிக்க தாக்குதலில் 68 ஆப்பிரிக்க அகதிகள் உயிரிழப்பு

துபை: யேமனில் அமெரிக்கா திங்கள்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 68 ஆப்பிரிக்க அகதிகள் உயிரிழந்ததாக அந்த நாட்டின் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்திவரு ம் ஹூதி கிளா்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா். இது... மேலும் பார்க்க

கைலாஷ்-மானசரோவா் யாத்திரையை மீண்டும் தொடங்க ஏற்பாடுகள் தீவிரம்: சீனா

பெய்ஜிங்: இந்திய யாத்ரிகா்களுக்காக கைலாஷ்- மானசரோவா் யாத்திரையை வரும் கோடைகாலத்தில் மீண்டும் தொடங்க இரு தரப்புக்கும் இடையே முன்னேற்பாடுகள் நடந்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது. கைலாஷ் -மானசரோவா் யாத்தி... மேலும் பார்க்க