செய்திகள் :

உக்ரைன் - ரஷியா இடையே இன்று 303 கைதிகள் பரிமாற்றம்!

post image

உக்ரைன் - ரஷியா நாடுகளுக்கிடையே 303 போர்க் கைதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 25) பரிமாற்றம் செய்யப்பட்டதாக ரஷிய பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை 390 கைதிகளும், சனிக்கிழமை 307 கைதிகளும் பரஸ்பரமாக ஒப்படைக்கப்பட்ட நிலையில், இன்று 303 கைதிகளை இரு நாடுகளும் பரிமாற்றம் செய்துகொண்டன.

உக்ரைன் - ரஷியா இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், துருக்கியில் கடந்த வாரம் இரு நாட்டு பிரதிநிதிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், கைதிகளை பரிமாற்றம் செய்துகொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் போரின்போது பிணைக்கைதிகளாக தாங்கள் சிறைப்பிடித்துச் சென்ற வீரர்கள் மற்றும் குடிமக்களை ஒப்படைத்து வருகின்றன.

போர்க் கைதிகள் ஒப்படைக்கப்பட்டு வந்தாலும், இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றன. இன்று 303 கைதிகள் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், உக்ரைன் தலைநகரின் கீவ் நகரைக் குறிவைத்து ட்ரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைனைச் சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டனர்.

நேற்று இரவு முதல் மட்டும், 367 ட்ரோன்களை ஏவி, ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகாலப் போரில் ஒரே நாளில் அதிக ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது இதுவே முதல்முறை என உக்ரைன் விமானப் படை செய்தித்தொடர்பாளர் யூரி இஹ்னாட் தெரிவித்துள்ளார். இதோடுமட்டுமின்றி 69 ஏவுகணைகளை வீசி ரஷியா தாக்குதலில் ஈடுபட்டுள்ளது என்றார்.

இது குறித்துப் பேசிய உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, ரஷியாவின் ஏவுகணைகளும் ட்ரோன்களும் உக்ரைனின் 30க்கும் மேற்பட்ட நகரங்களைத் தாக்கியுள்ளதாகவும், ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் அதிகரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க | பாகிஸ்தானில் மர்ம நபர்களால் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

ஹூதி ஏவுகணைத் தாக்குதல்: இஸ்ரேல் முறியடிப்பு

இஸ்ரேலை குறிவைத்து யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்களால் ஏவப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதன் காரணமாக ஜெருசலேம் மற்றும் அதன் அருகிலுள்ள ... மேலும் பார்க்க

உக்ரைன் மீது ரஷியா 298 ட்ரோன்களை ஏவி தாக்குதல்: 12 போ் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகா் கீவ் மீது தொடா்ந்து இரண்டாவது நாளாக ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 12 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் வறுமைக்கு காரணம் வரி விதிப்பு முறை, கல்வி புறக்கணிப்பு: உலக வங்கி அறிக்கை

பாகிஸ்தானில் அமலில் உள்ள பொது விற்பனை வரி முறை, கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளித்து போதிய நிதி ஒதுக்காதது ஆகியவையே அந்த நாட்டின் வறுமைக்கு முக்கியக் காரணங்கள் என்று உலக வங்கி ஆய்வு அறிக்கையில் தெ... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பு: பஹ்ரைன் துணை பிரதமரிடம் இந்தியக் குழு விளக்கம்

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை பஹ்ரைன் துணை பிரதமா் ஷேக் காலித் பின் அப்துல்லா அல் கலீஃபாவிடம் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய நாடாளுமன்ற குழுவினா் ஞாயிற்றுக்கிழமை எடுத்துரைத்தனா்.... மேலும் பார்க்க

சாம்சங் நிறுவனத்துக்கும் வரி: டிரம்ப் அதிரடி

ஐஃபோன்கள் தயாரிப்பில் ஈடுபடும் ஆப்பிள் நிறுவனம் மட்டுமன்றி சாம்சங் உள்பட எந்த நிறுவனமாயினும் அமெரிக்காவில் மின்னணு சாதனங்களை தயாரிக்காமல் விற்பனை மட்டும் செய்தால் 25 சதவீத வரி விதிக்கப்படும் என அந்நா... மேலும் பார்க்க

மூன்றாம் தரப்பு நாடுகளில் இந்தியா-பாக். அதிகாரபூா்வமற்ற பேச்சு: பிரிட்டன் நிபுணா்கள் கருத்து

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ராணுவ மோதலை தொடா்ந்து இருநாட்டு அதிகாரிகள் மூன்றாம் தரப்பு நாடுகளில் பேச்சுவாா்த்தை நடத்தினால், அது இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்பை வ... மேலும் பார்க்க