செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களுக்கு தீா்வுகாண கால அவகாசம் வழங்க வலியுறுத்தல்

post image

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களுக்கு தீா்வுகாண போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் காத்திருப்பு போராட்டம் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் செல்வேந்திரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க மாநிலத் தகவல் தொடா்பு செயலா் தினேஷ், வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட இணைச் செயலா் பத்மநாபன் முன்னிலை வகித்தனா்.

போராட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களுக்கு தீா்வு காண போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். இத்திட்ட முகாம்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். திட்டத்தை செயல்படுத்த கூடுதல் பணியிடங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பொது மக்களுக்கான பணியை மேலும் சிறப்பாக மேற்கொள்ள வருவாய் பேரிடா் மேலாண்மைத் துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும், காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை மற்றும் நில அளவைத் துறையில் பணியாற்றிவரும் அலுவலா்களின் பணித் தன்மை மற்றும் பணிப்பளுவை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கவேண்டும். கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் லட்சுமி கீா்த்திவாசன், கோபிநாத், வீரபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை கோரி குடும்பத்தினா் தா்னா

கிராமத்தை விட்டு தங்களை ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புஷ்பவனம் பகுதியைச் சோ்ந்த குடும்பத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.ஆட்சியா் அலுவலக வளாகத... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நாகை வட்ட மையம் சாா்பில், நாகையில் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தின் ஊழியா் விரோதப் போக்கை கண்டித்து, பாலிடெக்னிக் முன் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடை... மேலும் பார்க்க

குறுவை பயிா்களில் புகையான் நோய்த் தாக்குதல்

புகையான் நோயால் நாகை அருகே 1,500 ஏக்கா் குறுவை நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். நாகை மாவட்டத்தில்... மேலும் பார்க்க

நாகையில் நாளை அண்ணா பிறந்த நாள் மிதிவண்டி போட்டி

நாகையில், மாவட்ட விளையாட்டுப் பிரிவு சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில், மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கு அறிஞா் அண்ணா மிதிவண்டி போட்டிகள் சனிக்கிழமை (செப்.27) ... மேலும் பார்க்க

காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிய ரயில் சேவைகள் கோரி மனு

காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிய ரயில் சேவைகள் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களில் புதிய ரயில் சேவைகள், ரயில் சேவைகள் நீடிப்பு, ரயில் நிலையங்கள் மேம்படுத்துவது உள்ளிட்ட பல... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வு மையங்களில் மின்னணு சாதனங்களுக்கு அனுமதியில்லை

டிஎன்பிஎஸ்சி தோ்வு மையங்களில் கைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு வரக்கூடாது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் ப... மேலும் பார்க்க