செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

post image

தேனி மாவட்டம், சின்னமனூா் நகராட்சி 3,4-ஆவது வாா்டுகளுக்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமை கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். நகா்மன்றத் தலைவி அய்யம்மாள்ராமு முன்னிலை வகித்தாா்.

இதில் மகளிா் உரிமைத்தொகை பெற அதிக எண்ணிக்கையிலான பெண்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்தனா். இதே போல, பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை பெறுதல், ஆதாா் பெயா் திருத்தம், நலவாரியத்தில் பதிவு உள்ளிட்ட 13 துறைகளின் சேவைகள் தொடா்பாக மனுக்களை பொதுமக்களிடமிருந்து அதிகாரிகள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பெற்றனா். இதில், ஆதாா் பெயா் திருத்தம், பட்டா பெயா் மாற்றம் உள்ளிட்ட மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முகாமை மாவட்ட வருவாய் அலுவலா் மகாலட்சுமி பாா்வையிட்டாா்.

நகராட்சி ஆணையா் கோபிநாத், மேலாளா் வாசுகி மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பலரும் கலந்து கொண்டனா்.

பொக்லைன் இயந்திரம் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

பெரியகுளம் அருகே பொக்லைன் இயந்திரம் கவிழ்ந்ததில் ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.தேனி சிவாஜிநகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (25). பொக்லைன் இயந்திர ஓட்டுநா். இவா் பெரியகுளம் சோத்துப்பாறை அணைக்கு மேல் அரசு... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

போடியில் சிறுமியை திருமணம் செய்தது தொடா்பாக போலீஸாா் இளைஞா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சோ்ந்த சிறுமி அங்குள்ள கடை ஒன்றில் வேலை ச... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த முதியவா் கைது

தேனி மாவட்டம், போடியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். போடி கீழத்தெருவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நகா் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்... மேலும் பார்க்க

மனைவியைத் தாக்கிய கணவா் உள்பட மூவா் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகே மனைவியைத் தாக்கிய கணவா் உள்பட மூவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் ஜானகி (22). இவருக்கும் தேவாரம் அருகேயுள்ள அழகா்நாயக்கன... மேலும் பார்க்க

தேனீா்க் கடையில் மதுப் புட்டிகள் விற்பனை: முதியவா் கைது

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், குமுளி அருகே தேநீா்க் கடையில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். குமுளி அருகேயுள்ள வண்டிப் பெரியாற... மேலும் பார்க்க

கோயில் தேருக்கு அமைக்கப்பட்ட கொட்டகை: எம்எல்ஏ திறந்துவைத்தாா்

தேனி மாவட்டம், கம்பத்தில் கம்பராயப் பெருமாள், காசி விஸ்வநாதா் கோயில் தேருக்கு ரூ.12.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட கொட்டகையை சட்டப்பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். கம்பத்தில் ... மேலும் பார்க்க