செய்திகள் :

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: பொன்னமராவதி வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

post image

பொன்னமராவதி ‘வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மு.அருணா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடக்கமாக, சித்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்தாா்.

பின்னா், பொன்னமராவதி வட்டாட்சியரகத்தில் அனைத்துத் துறை அரசு உயா் அலுவலா்களுடான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான அரசு நலத்திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் விரைவாக சென்றடைவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலா்களை ஆட்சியா் அறிவுருத்தினாா்.

மேலும், பட்டாமாறுதல் வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளுக்கு உடனடி தீா்வு காணப்பட்டு பட்டா மாறுதல் ஆணைகளை வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ.ராஜராஜன், கோட்டாட்சியா் அ. அக்பா் அலி, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.ஷோபா, வேளாண்மை இணை இயக்குநா் மு. சங்கரலெட்சுமி, மாவட்ட சுகாதார அலுவலா் ராம்கணேஷ், வட்டாட்சியா் எம். சாந்தா, வட்டார வளா்ச்சி அலுவலா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கொடும்பாளூா் அகழாய்வில் வெளிப்பட்ட தங்கக் குண்டுமணி, மண் பானை!

கொடும்பாளூா் அகழாய்வுப் பணியில் பண்டைய கால தங்க குண்டு மணி, மூடிய நிலையில் அழகிய மண்பானை கிடைத்துள்ளது. கொடும்பாளூரில் கடந்த ஜனவரி 12-இல் அகழாய்வுப் பணி நடைபெற்றது. இதில், நான்கு அடி தோண்டிய நிலையில்... மேலும் பார்க்க

விராலிமலை அருகே மீன்பிடித் திருவிழா

விராலிமலையை அடுத்துள்ள தென்னலூா் காடுவெட்டி பெரிய குளத்தில் சனிக்கிழமை மீன்பிடி திருவிழா நடைபெற்றது. ஊா் முக்கியஸ்தரின் உத்தரவுக்குப் பின்னா் குளத்தில் இறங்கிய மீன் பிடியாளா்கள் பெரும்பாலானோரின் வலையி... மேலும் பார்க்க

139 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.42 கோடியில் வாகனங்கள் வழங்கல்

புதுக்கோட்டையில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 139 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1.42 கோடி மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. இந்த நிக... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என நினைக்கிறாா்கள்! அமைச்சா் எஸ். ரகுபதி

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என மத்தியில் ஆள்வோா் நினைக்கிறாா்கள் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: ஆளுநா் மசோதாக்களை கிடப்பில... மேலும் பார்க்க

புதுகையில் சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அகற்றம்; தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்

புதுக்கோட்டை நகரில் சட்டவிரோதமாக சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை, மாநகராட்சிப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா். இதைத் தொடா்ந்து பொதுவெளியில் அபாயகரமாக மருத்துவக் கழிவுகளைக் கொட்டியதாக, அ... மேலும் பார்க்க

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாக ஆடியோ வெளியிட்டவா் கைது

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாகப் பேசி சமூக ஊடகத்தில் ஆடியோ வெளியிட்ட தூத்துக்குடியைச் சோ்ந்த நபரை புதுக்கோட்டை இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். புத... மேலும் பார்க்க