செய்திகள் :

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு!

post image

மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆராதே மற்றும் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.

இரண்டு புதிய நீதிபதிகளுக்கு இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். புதிதாகப் பதவியேற்ற நீதிபதிகளுடன் தற்போது உச்ச நீதிமன்றத்தில் 34 நீதிபதிகளைக் கொண்டுள்ளது.

ஆகஸ்ட் 25 அன்று, உச்ச நீதிமன்ற கொலீஜியம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி உயர்வுக்கு நீதிபதிகள் ஆராதே மற்றும் பஞ்சோலி ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்தது.

நீதிபதி அலோக் ஆராதே

ஏப்ரல் 13, 1964இல் பிறந்த நீதிபதி ஆராதே, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக டிசம்பர் 29, 2009 அன்று நியமிக்கப்பட்டு, பிப்ரவரி 15, 2011 அன்று நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட அவர், செப்டம்பர் 20, 2016 அன்று பதவியேற்றார். ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக மே 11, 2018 அன்று நியமிக்கப்பட்டார்.

நீதிபதி ஆராதே கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் நவம்பர் 17, 2018 அன்று நீதிபதியாகப் பதவியேற்றார். கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக ஜூலை 3, 2022 அன்று பொறுப்பேற்றார், அக்டோபர் 14, 2022 வரை அந்தப் பதவியில் பணியாற்றினார்.

நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி

மே 28, 1968 இல் அகமதாபாத்தில் பிறந்த நீதிபதி பஞ்சோலி, அக்டோபர் 1, 2014 அன்று குஜராத் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார், மேலும் ஜூன் 10, 2016 அன்று நிரந்தர நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.

அவர் பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, ஜூலை 24, 2023 அன்று அங்கு நீதிபதியாகப் பதவியேற்றார். ஜூலை 21, 2025 அன்று பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி பஞ்சோலி பதவியேற்றார்.

செப்டம்பர் 1991 இல் அவர் வழக்கறிஞர் பணியில் சேர்ந்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பயிற்சியைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chief Justice of India B R Gavai on Friday administered oath to Bombay High Court Chief Justice Alok Aradhe and Patna High Court Chief Justice Vipul Manubhai Pancholi.

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து! -சுதர்சன் ரெட்டி

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்தாக முடியும் என்று குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து போட்டியிடும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி. ச... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: பிரதமர் மோடி வெளியே முகம் காட்ட தயங்கும் நிலைமை விரைவில் ஏற்படும்! -ராகுல் காந்தி

‘வாக்குத் திருட்டு’ விவகாரத்தில் பாஜகவுக்கு எதிரான பெரியளவிலான ஆதாரங்களை பொதுவெளியில் கொண்டு சேர்ப்போம் என்றும், அதன் எதிரொலியாக, பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் தமது முகத்தைக்கூட காட்டத் தயங்கும் அளவுக... மேலும் பார்க்க

டிராகன் முன்பு சரணடைந்தது யானை: மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ்

சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுவார்த்தையை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. பிரதமரின் பேச்சுவார்த்தை சீனாவுக்கு கட்டுப்பட்டு நடப்பதைப்போன்று கோழைத்தனமாக இருந்ததாகவும், டி... மேலும் பார்க்க

ஓபிசி இடஒதுக்கீட்டை பாதிக்காமல் மராத்தா பிரிவினருக்கென இடஒதுக்கீடு: மகாராஷ்டிர அமைச்சர்

ஓபிசி இடஒதுக்கீட்டை பாதிக்காமல் மராத்தா பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்று மகாராஷ்டிர அமைச்சர் சகன் புஜ்பல் தெரிவித்திருக்கிறார். மகாராஷ்டிரத்தில் குன்பி பிரிவில் மராத்தா சமூகத்தினரை சோ்த்து ... மேலும் பார்க்க

ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த பெண் போலீஸ்! திடீரென வீட்டுக்குள் நுழைந்த கணவன்! அப்புறமென்ன..?

உத்தரப் பிரதேசத்தின் குஷிநகர் அருகே காவல் துறையில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வரும் காவலர் ஒருவர், தனது மனைவி வேறொரு ஆணுடன் வீட்டில் தங்கியிருப்பதைப் பார்த்த அதிர்ச்சியில் அவர்கள் இருவரையும் அடித்து தாக... மேலும் பார்க்க

ஷார்ஜாவில் கணவரின் சித்திரவதை தாங்காமல் கேரள இளம்பெண் மரணம்? விடியோ வெளியாகி பரபரப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஷார்ஜாவில் உயிரிழந்த கேரள இளம்பெண் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு அதனை தாங்கிக் கொள்ள முடியாமலே உயிரிழந்தார் என்பதற்கு வலுசேர்க்கும் விதத்தில் தற்போது விடியோ ஆதாரம் வெளியாகி ப... மேலும் பார்க்க