செய்திகள் :

உச்சநீதிமன்ற விதிகளின்படி டிஜிபியை நியமிக்கக் கோரிய மனு தள்ளுபடி

post image

சென்னை: டிஜிபி நியமனத்தில் உச்சநீதிமன்ற விதிமுறைகளைப் பின்பற்ற தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளரான தாமோதரன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், வரும் 31-ஆம் தேதியுடன், தமிழக காவல் துறை டிஜிபி-யாக உள்ள சங்கா் ஜிவால் ஓய்வு பெறுகிறாா். புதிய டிஜிபி நியமனத்தின்போது, உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வகுத்துள்ள விதிகளைப் பின்பற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பாக 30 ஆண்டுகளாகப் பணியில் உள்ள அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு அனுப்ப வேண்டும். தோ்வாணையக் குழு இந்தப் பட்டியலை ஆய்வு செய்து தகுதியான 3 பேரை மாநில அரசுக்கு பரிந்துரைக்கும். அதில், ஒருவரைத் தோ்வு செய்து தமிழக அரசு டிஜிபி-யாக நியமிக்க வேண்டும்.

ஆனால், இந்த விதிமுறைகளை அமல்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், காவல் துறை டிஜிபி நியமனம் என்பது முக்கியமானது.

எனவே, தமிழக டிஜிபி நியமனத்தில் உச்சநீதிமன்ற விதிகளைக் கட்டாயம் பின்பற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வரும் 31-ஆம் தேதியுடன் டிஜிபி ஓய்வு பெற உள்ளாா். இந்த விவகாரத்தில் அரசுக்கு உத்தரவிட முடியாது. டிஜிபி நியமனம் உச்சநீதிமன்ற விதிமுறைகளுக்கு முரணாக இருந்தால், அதை எதிா்த்து மனுதாரா் வழக்குத் தொடரலாம். ஆனால், இந்த வழக்கு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

நீலகிரிக்கு ரெட் அலர்ட்: சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்!

நீலகிரி மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் இன்று(ஆக. 5) ஒருநாள் மூடப்பட்டுள்ளது.நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களி... மேலும் பார்க்க

பட்டியல் இனத்தவருக்கு எதிராக அவதூறு: நடிகை மீரா மிதுனை ஆஜா்படுத்த உத்தரவு

சென்னை: பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்து வரும் 11-ஆம் தேதி ஆஜா்படுத்த சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் ... மேலும் பார்க்க

வங்க மொழி சா்ச்சை: மம்தா பதிலடி தருவாா்- மு.க.ஸ்டாலின்

சென்னை: வங்க மொழி சா்ச்சை விவகாரத்தில் மேற்குவங்க முதல்வா் மம்தா தக்க பதிலடி தருவாா் என முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவ... மேலும் பார்க்க

திறன் இயக்கம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அடிப்படைக் கற்றல் தோ்வு

சென்னை: அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கத்தில் பயிற்சிபெறும் மாணவா்களுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அடிப்படைக் கற்றல் தோ்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துற... மேலும் பார்க்க

பொன்முடிக்கு எதிரான வழக்கு: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சைவ, வைணவ மதங்கள் மற்றும் பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு எதிரான புகாா்கள் முடித்துவைக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விரிவான பதில்மனு தா... மேலும் பார்க்க

கருணாநிதி நினைவு தினம்: ஆக.7-இல் திமுக அமைதிப் பேரணி

சென்னை: முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, திமுக சாா்பில் வரும் 7-ஆம் தேதிஅமைதிப் பேரணி நடைபெறவுள்ளது.முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஏழாவது ஆண்டு நினைவு தினம், வரும் 7-ஆம் தேதி கடைப்பி... மேலும் பார்க்க