செய்திகள் :

'உடனே குழந்தை பெத்துக்கோங்க.. ஆனால்..' - உதயநிதி பேச்சு!

post image

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாட்டு முறையை செயல்படுத்திய தமிழ்நாடு, தற்போது தொகுதி மறுசீரமைப்பினால் வஞ்சிக்கப்படுவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் 72 இணையர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,

"திருமணமானவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். உடனே குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால் நிறைய பெற்றுக்கொள்ளாதீர்கள். அதையும் மத்திய அரசு பார்த்துக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசு குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தி மக்கள்தொகையைக் குறைக்க வேண்டும் என்று கூறியது. அதனை வெற்றிகரமாக செயல்படுத்தியது தமிழக அரசு. அதனால்தான் இப்போது தண்டிக்கப்படுகிறோம்.

இதையும் படிக்க | மேற்கு வங்கத்தில் விளையும் காளான், புற்றுநோய்க்கு மருந்தாகுமா? - புதிய கண்டுபிடிப்பு!

தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வந்தால் தமிழ்நாட்டில் 8 தொகுதிகள் குறைந்துவிடும். ஆனால் குடும்பக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தாத மாநிலங்கள் இதனால் நன்மை அடையப் போகின்றன. வடமாநிலங்கள் 100 தொகுதிகள் வரை பெறப் போகின்றன.

எனவேதான் குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள், குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களைச் சூட்டுங்கள்" என்று பேசினார்.

நாமக்கல்: நரசிம்மர் கோயில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

நாமக்கல்: நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற தெப்பத் திருவிழாவில், நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சனேயர் உற்சவ மூர்த்திகளாக தெப்பத்தில் வலம் வந்தனர். திரளான பக்தர்கள் சுவாமியை கண்டு வழிபட்டனர்.நாமக்கல் நகரின... மேலும் பார்க்க

தமிழகத்தில் கோடை விடுமுறை எப்போது? வெளியான இறுதித் தேர்வு அட்டவணை!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.தற்போது 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. ... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: சென்னையில் மார்ச் 22-ல் மாநிலக் கட்சிகள் கூட்டம்!

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் பல்வேறு மாநிலக் கட்சிகள் கலந்துக் கொள்ளும் கூட்டம் மார்ச் 22-ஆம் தேதி நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.”தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி, தென்ன... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட்: 100 இடங்களில் ஒளிபரப்ப ஏற்பாடு!

தமிழக பட்ஜெட் நாளை மறுநாள்(மார்ச் 14) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.தமிழக பட்ஜெட் நிகழ்வை மக்கள் அதிகமாக கூடும் சென்னை மெரீனா ... மேலும் பார்க்க

பெரியார் சர்ச்சை: மத்திய நிதி அமைச்சருக்கு எதிராக விஜய் கேள்வி!

பெரியார் விவகாரம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”பெரிய... மேலும் பார்க்க

தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா? மு.க. ஸ்டாலின்

மாநில உரிமைகளைப் பறிக்கும் எண்ணத்துடன் மத்திய அரசு செயல்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் வஞ்சிப்பது நியாயமா? எனக் கேட்ட அவர... மேலும் பார்க்க