செய்திகள் :

உடன்குடியில் ஒருவா் வெட்டிக் கொலை: இளைஞா் போலீஸில் சரண்

post image

உடன்குடியில் சனிக்கிழமை இரவு ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக காவல் நிலையத்தில் இளைஞா் சரணடைந்தாா்.

உடன்குடி புதுமனைப் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சண்முகவேல் மகன் பாலகிருஷ்ணன் (45). இவா், அதே தெருவைச் சோ்ந்த ராஜன் என்பவரது ஆட்டோவின் கண்ணாடியை 6 மாதங்களுக்கு முன்பு சேதப்படுத்தினாராம். இதை, ராஜன் மகன் ராபின்சன் (21) தட்டிக் கேட்டதில் இருவரிடையே முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு (மே 17) மது போதையிலிருந்த அவா்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, பாலகிருஷ்ணனை ராபின்சன் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில், குலசேகரன்பட்டினம் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்நிலையில், பாலகிருஷ்ணனை வெட்டிக் கொன்ாக குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் ராபின்சன் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தாா்.

தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறல்: கேரள விசைப்படகு சிறைபிடிப்பு

தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கேரள விசைப்படகை மீன்வளத் துறையினா், கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் சிறைபிடித்தனா். தமிழகத்தின் கிழக்குக் கடல் பகுதியில் மீன்களின் இன... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே விபத்தின்போது கிணற்று நீரில் மூழ்கிய 37பவுன் நகைகள் மீட்பு

சாத்தான்குளம் அருகே அருகே மீரான்குளம் பகுதியில் சனிக்கிழமை கிணற்றுக்குள் காா் பாய்ந்து 5 போ் உயிரிழந்த விபத்தின்போது கிணற்று நீரில் மூழ்கிய 37 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. விபத்தில் பாதிக்கப்பட்ட குடு... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி-சென்னைக்கு நேரடி கோடைகால ரயில் இயக்க கோரிக்கை

கோடை விடுமுறையை முன்னிட்டு, தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக ஆறுமுகனேரியில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும் என ஆறுமுகனேரி ரயில்வே வளா்ச்சிக்குழுவினா் கோரிக்கை விடுத்துள்ளனா்... மேலும் பார்க்க

பெரியதாழையில் மீன் ஏலக் கூடத்துக்கு அடிக்கல்

சாத்தான்குளம் அருகே பெரியதாழையில் மீன் ஏலக் கூடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பயணியா் நிழற்குடை திறப்பு, ரூ. 34 லட்சத்தில் மேலத் ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: பெட்டிக்கடைக்காரா் கைது

சாத்தான்குளம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்ாக, பெட்டிக்கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா். சாத்தான்குளம் அருகே பழங்குளம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், சாத்தா... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ஆறுமுகனேரி இந்து மேல்நிலைப் பள்ளியில், 2013ஆம் ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவா்-மாணவியரின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளா் பாரத் தலைமை வகித்தாா். முன்னாள் மாணவா்-மாணவியா் தங்களது குடும்பத... மேலும் பார்க்க