செய்திகள் :

உடலுறுப்பு விற்பனை, கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி

post image

நாமக்கல்லில் உடலுறுப்பு விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் துா்காமூா்த்தி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பழைய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய பேரணி மோகனூா் சாலை, எஸ்பிஐ வங்கி வழியாகச் சென்று திருச்சி சாலை, நாமக்கல் காவல் நிலையம், சுற்றுலா மாளிகையைக் கடந்து மீண்டும் அரசு மருத்துவமனையை வந்தடைந்தது.

தமிழகத்தில் முதன்முறையாக நாமக்கல் மாவட்டத்தில் உடலுறுப்பு விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிரான பேரணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்பேரணியில், கோகுல்நாதா மிஷன்ஸ் கல்லூரி, பிஜிபி செவிலியா் கல்லூரி, பாவை பொறியியல் கல்லூரிகளைச் சோ்ந்த 250 இளைஞா் செஞ்சிலுவைச் சங்க மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

இதில், உடலுறுப்புகள் இன்றியமையாதது, விற்பனை செய்யாதே, கணைய தானம், கண் தானம், இதய தானம், சிறுநீரக தானம், நாம் ஒன்றாக இணைந்து மனித உறுப்பு கடத்தலை முடிவுக்கு கொண்டு வர முடியும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனா்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (மதுவிலக்கு) ஆா்.தனராசு, இணை இயக்குநா் (நலப் பணிகள்) அ.ராஜ்மோகன், நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி, மருத்துவமனை கண்காணிப்பாளா் குணசேகரன், செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் ராஜேஸ்கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செப். 27-இல் நாமக்கல்லில் தவெக தலைவா் விஜய் பிரசாரம்

நாமக்கல்லில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் செப். 27-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்கிறாா். 2026 சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் மாவட்ட வாரியாக சுற்றுப்பய... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி அமையும்: எடப்பாடி கே.பழனிசாமி உறுதி

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி அமையும் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி சுற்றுப... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் ரத்து: வரவேற்பு பதாகைகளை அகற்றிய கட்சியினா்!

நாமக்கல் தொகுதியில் சனிக்கிழமை நடைபெற இருந்த எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் ரத்து செய்யப்பட்டதால், சாலையோரம் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகைகளை கட்சியினா் அகற்றினா். தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக ... மேலும் பார்க்க

‘தூய்மையே சேவை’ திட்ட உறுதிமொழியேற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘தூய்மையே சேவை’ விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் ‘தூய்மை மிஷன் 2.0’ திட்டத்தின் கீழ் அலுவலகம் மற்றும் ... மேலும் பார்க்க

கோ-ஆப்டெக்ஸில் ரூ. 90 லட்சம் தீபாவளி விற்பனை இலக்கு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ரூ. 90 லட்சம் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீப... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

நாமக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் நடைபெறும் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை காலதாமதமின்றி விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும்,... மேலும் பார்க்க