செய்திகள் :

உணவுப் பாதுகாப்பு காவலர் எம்.எஸ். சுவாமிநாதன்: முதல்வர் ஸ்டாலின்

post image

சென்னை: பல கோடி பேரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எம்.எஸ். சுவாமிநாதன் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று காலை நடைபெற்ற பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி விழாவில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், தான் கொண்ட அறிவை, தான் கற்ற அறிவியலை மக்கள் பசிபோக்க பயன்படுத்திய சிந்தனையாளர் எம்.எஸ். சுவாமிநாதன்.

இன்று உலகமே பேசிக் கொண்டிருக்கும் காலநிலை மாற்றம் குறித்து 50 ஆண்டுகளுக்கு முன்பே எம்.எஸ். சுவாமிநாதன் பேசியிருக்கிறார்.

மக்களின் வயிறு நிறைய மாபெரும் புரட்சி நடத்திய எம்எஸ் சுவாமிநாதன் பெயரை இந்தியா என்றும் மறக்காது. இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என உலகமே அழைத்தாலும் நமக்கு அவர் உணவுப் பாதுகாப்பின் காவலராகவும், குரலற்றவர்களின் குரலாகவும் எளிமையுன் உருவமாகவும் இருந்தார். சத்தான, மக்கள் தொகைக்கான தேவையை தீர்க்கும் ஆற்றல் உள்ள பயிரை கண்டறியவே தனது வாழ்நாளை அர்ப்பணித்தார் என்று புகழாரம் சூட்டினார்.

இங்குள்ள அறிவியலாளர்களும் அவருடைய ஆராய்ச்சி அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களும் இருக்கிறீர்கள். அவருடைய கனவுகளை நனவாக்கும் பணிகளை நீங்கள் எல்லோரும் தொடர்ந்து செய்ய வேண்டும். மண்ணுயிர் காக்கும் எங்களது முயற்சிக்கு அறிவியலாளர்கள் துணை நிற்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

2021-யைவிட 2026 தேர்தலில் அதிமுக மோசமான தோல்வியைச் சந்திக்கும்: டிடிவி தினகரன்

2021 தேர்தலைவிட 2026 தேர்தலில் அதிமுக மோசமான தோல்வியைச் சந்திக்கும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் அமர்வதைவிட கட்சியை த... மேலும் பார்க்க

குரூப் 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள்! - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

கடந்த ஜூலை மாதம் நடந்த குரூப் 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கிராம நிா்வாக அலுவலா்கள், இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா் மற்றும் சுருக்கெ... மேலும் பார்க்க

தவெக தலைவர் விஜய் பிரசாரம் டிசம்பர் வரையல்ல! அட்டவணையில் திடீர் மாற்றம்!!

தவெக தலைவர் விஜய், மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டம் டிசம்பர் மாதம் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிப்ரவரி மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டு புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

நாமக்கல், கரூரில் பிரசாரம்: திருச்சி வந்தார் தவெக தலைவர் விஜய்!

தவெக தலைவா் விஜய், நாமக்கல் மற்றும் கரூரில் இன்று மக்கள் சந்திப்பு பிரசாரத்தை மேற்கொள்ளவிருக்கும் நிலையில், தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.திருச்சி விமான நிலையத்திலிருந்து, சிறப... மேலும் பார்க்க

சென்னை தெருக்களுக்கு நடிகா் ஜெய்சங்கா், எஸ்.வி.சேகா் தந்தை பெயா்ப் பலகைகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

சென்னையில் தெருக்களுக்கு நடிகா் ஜெய்சங்கா், நடிகா் எஸ்.வி.சேகா் தந்தை ஆகியோரது பெயா்கள் சூட்டப்பட்ட பெயா்ப் பலகைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து க... மேலும் பார்க்க

இளையராஜா வழக்கு: சோனி நிறுவனத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

இசையமைப்பாளா் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தி வணிக ரீதியாக ஈட்டிய வருவாய் விவரங்களைத் தாக்கல் செய்ய சோனி நிறுவனத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சோனி மியூசிக் எண்டா்டெய்ன்மென்ட், எக்கோ ரெக்... மேலும் பார்க்க