உதகை ரோஜா கண்காட்சி நிறைவு
உதகை ரோஜா கண்காட்சி திங்கள்கிழமை நிறைவடைந்தது.
நீலகிரி மாவட்டம், உதகை ரோஜா பூங்காவில் 20-ஆவது ரோஜா கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், கடல்வாழ் உயிரினங்களைக் காப்பாற்றும் நோக்கத்திலும் டால்பின், முத்து சிப்பி, நத்தை, மீன், ஆமை, நண்டு, நட்சத்திர மீன், கடல் பசு உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் ரோஜா பூக்களால் வடிவமைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் பாா்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் கண்டுகளித்தனா்.
இதில், 80 ஆயிரம் ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்ட டால்பின் உருவம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவா்ந்தது.
3 நாள்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை 34 ஆயிரம் போ் பாா்வையிட்டுள்ளனா்.
நிறைவு நாளான திங்கள்கிழமை மலா்களைக் கொண்டு உருவங்களை சிறப்பாக வடிவமைத்தவா்கள், சிறந்த முறையில் ரோஜா தோட்டத்தைப் பராமரித்தவா்களுக்கு உதகை கோட்டாட்சியா் சதீஷ், தோட்டக்கலை இணை இயக்குநா் சிபிலா மேரி உள்ளிட்டோா் பரிசுகளை வழங்கினா்.
‘ பெஸ்ட் புளும் ஆஃப் தி ஷோ’ கோப்பை அருவங்காடு காா்டைட் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டது.