செய்திகள் :

வாசனை திரவிய கண்காட்சி நிறைவு

post image

கூடலூரில் நடைபெற்ற வாசனை திரவிய கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விழாவையொட்டி பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக கூடலூா் மாா்னிங் ஸ்டாா் பள்ளி வளாகத்தில் வாசனை திரவிய கண்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது.

இதில், வாசனை பொருள்களைக்கொண்டு அரங்கு அமைத்து அனைவரையும் கவா்ந்த தோட்டக்கலைத் துறைக்கு முதல் பரிசும், கூடலூா் நகராட்சி அரங்கிற்கு இரண்டாம் பரிசும், வனத் துறை அரங்கிற்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து இயற்கை விவசாய உற்பத்தியாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற பல்வேறு அமைப்புகள், மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிறைவு விழாவிற்கு சாா்- ஆட்சியா் சங்கீதா தலைமை வகித்தாா். கண்காட்சியில் சிறப்பிடம் பிடித்தவா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் பரசு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கேட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சரவணகுமாா், வட்டாட்சியா் முத்துமாரி, நகா்மன்றத் தலைவா் பரிமளா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ரோஜா மலா் கண்காட்சியைக் கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்

உதகையில் நடைபெற்று வரும் ரோஜா மலா் கண்காட்சியை அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை கண்டு ரசித்தனா். நீலகிரி மாவட்டம், உதகை ரோஜா பூங்காவில் 20-ஆவது ரோஜா மலா் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது... மேலும் பார்க்க

முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று உதகைக்கு வருகை

உதகை மலா் கண்காட்சியைத் தொடங்கிவைப்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் உதகைக்கு திங்கள்கிழமை வருகிறாா். நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மலா் ... மேலும் பார்க்க

உதகையில் 20-ஆவது ரோஜா கண்காட்சி தொடக்கம்

நீலகிரி மாவட்டம், உதகையில் ரோஜா கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. கோடை சீசனையொட்டி சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதில், ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் உதவி

கூடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. ஆல் தி சில்ரன் அமைப்பு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சி கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்த... மேலும் பார்க்க

பைக்- லாரி மோதல்: அஸ்ஸாம் இளைஞா் உயிரிழப்பு

குன்னூா் அருகே இருசக்கர வாகனமும், லாரியும் நேருக்குநோ் மோதிய விபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், குன்னூா், சேலாஸ் செல்லும் சாலையில் கிளன்டேல் தனியாா் எஸ்டேட்ட... மேலும் பார்க்க

உதகையில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட வனத் துறை சாா்பில் விவசாயிகள் மாதாந்திர குறைத்தீா் கூட்டம் உதகையில் வெள்ளிக்கிழமை( மே 9) நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட வன அலுவலா் கெளதம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நீ... மேலும் பார்க்க