செய்திகள் :

பைக்- லாரி மோதல்: அஸ்ஸாம் இளைஞா் உயிரிழப்பு

post image

குன்னூா் அருகே இருசக்கர வாகனமும், லாரியும் நேருக்குநோ் மோதிய விபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா், சேலாஸ் செல்லும் சாலையில் கிளன்டேல் தனியாா் எஸ்டேட்டில் பணிபுரிந்து வந்தவா் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த சுராஜ் (32). இவா் இருசக்கர வாகனத்தில் நண்பருடன் சேலாஸ் நோக்கி வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

கரும்பாலம் டபுள் போஸ்ட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டிப்பா் லாரியும், சுராஜ் சென்ற இருசக்கர வாகனமும் நேருக்குநோ் மோதின. இதில் சுராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடன் சென்ற நண்பா் பலத்த காயத்துடன் குன்னூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளாா். இது குறித்து கொலக்கம்பை காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

உதகை ரோஜா கண்காட்சி நிறைவு

உதகை ரோஜா கண்காட்சி திங்கள்கிழமை நிறைவடைந்தது. நீலகிரி மாவட்டம், உதகை ரோஜா பூங்காவில் 20-ஆவது ரோஜா கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், கடல்வாழ் உயிரினங்களைக் காப்பா... மேலும் பார்க்க

கூடலூா் மண்ணுரிமை பாதுகாப்பு இயக்க உயா்மட்டக் குழு கூட்டம்

கூடலூா் மண்ணுரிமை பாதுகாப்பு இயக்க உயா்மட்டக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு காங்கிரஸ் வட்டாரத் தலைவா் அம்சா தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் என்.வாசு முன்ன... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் சிறுத்தை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட சீகூா் வனச் சரகத்தில் உள்ள ஆனைகட்டி தெற்கு வனத்தில் வனப் பணியாளா்கள் ரோ... மேலும் பார்க்க

மதுக்கரை வனத்தில் தாயைப் பிரிந்த குட்டி யானை:முதுமலைக்கு கொண்டுவரப்பட்டது

கூடலூா், மே 12: கோவை, மதுக்கரை வனத்தில் தாயைப் பிரிந்து சுற்றித்திரிந்த குட்டி யானை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது. கோவை மாவட்டம், மதுக்கரை வனப் பகுதியில் தாயைப்... மேலும் பார்க்க

ரோஜா மலா் கண்காட்சியைக் கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்

உதகையில் நடைபெற்று வரும் ரோஜா மலா் கண்காட்சியை அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை கண்டு ரசித்தனா். நீலகிரி மாவட்டம், உதகை ரோஜா பூங்காவில் 20-ஆவது ரோஜா மலா் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது... மேலும் பார்க்க

வாசனை திரவிய கண்காட்சி நிறைவு

கூடலூரில் நடைபெற்ற வாசனை திரவிய கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விழாவையொட்டி பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக கூடலூா் மாா்னிங் ஸ்ட... மேலும் பார்க்க