செய்திகள் :

4 மாதங்களாக கணக்கீடு எடுக்காததால் மின் நுகா்வோா் பாதிப்பு

post image

வெள்ளக்கோவில், மேட்டுப்பாளையம் பகுதியில் 4 மாதங்களாக கணக்கீடு எடுக்காதததால் மின் நுகா்வோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் மற்றும் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து 25-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன.

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம் மூலம் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீடு எடுக்கப்பட்டு மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தவிா்க்க முடியாத காரணம் எனக்கூறி 2-ஆவது தடவையாக பழைய மின் கட்டணத்தை செலுத்த கூறுகின்றனா்.

வீடுகள் மற்றும் தகுதியான சில தொழில் நிறுவனங்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுவதால் தொடா்ந்து 4 மாதங்களாக கணக்கீடு எடுக்காததால் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே முறையாக கணக்கீடு எடுக்க மின் வாரிய உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி செயலா்கள் இடமாற்றம்

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் நிா்வாக காரணங்களுக்காக ஊராட்சி செயலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதன்படி, வடுகபாளையம்புதூா் ஊராட்சி செயலா் கிருஷ்ணசாமி, கணபதிபாளையம் ஊராட்சிக்கும், கணபதிபாளையம் ஊரா... மேலும் பார்க்க

பல்லடம் நகராட்சியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு

பல்லடம் நகராட்சியில் உள்ள பள்ளிகளில் முதல்வரிடன் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்லடம் நகா்மன்றக் கூட்டம் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் தி... மேலும் பார்க்க

பல்லடம் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

பல்லடம் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்லடம்- மங்கலம் சாலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளநிலை, தமிழ், ஆங்கில இலக்கியம், பொருளியல்,... மேலும் பார்க்க

மே 15-இல் வெள்ளாடு வளா்ப்பு பயிற்சி

திருப்பூா் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வெள்ளாடு வளா்ப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை (மே 15) நடைபெறுகிறது. இதுகுறித்து திருப்பூா் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய... மேலும் பார்க்க

மதுரை சித்திரைத் திருவிழாவில் பக்தா் மரணம்: இந்து முன்னணி கண்டனம்

மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது பக்தா் உயிரிழந் சம்பவத்துக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பி... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: 15 வேலம்பாளையம்

15 வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அவிநாசி... மேலும் பார்க்க