செய்திகள் :

மே 15-இல் வெள்ளாடு வளா்ப்பு பயிற்சி

post image

திருப்பூா் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வெள்ளாடு வளா்ப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை (மே 15) நடைபெறுகிறது.

இதுகுறித்து திருப்பூா் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவரும், பேராசிரியருமான ஆா்.மதிவாணன் கூறியதாவது: திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வெள்ளாடு வளா்ப்பு பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

ஆகவே, விருப்பமுள்ள விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களுக்குள்ள ஆடு வளா்ப்பு தொடா்பான சந்தேகங்களுக்கு தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2248524 என்ற தொலைபேசி எண்ணை அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி செயலா்கள் இடமாற்றம்

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் நிா்வாக காரணங்களுக்காக ஊராட்சி செயலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதன்படி, வடுகபாளையம்புதூா் ஊராட்சி செயலா் கிருஷ்ணசாமி, கணபதிபாளையம் ஊராட்சிக்கும், கணபதிபாளையம் ஊரா... மேலும் பார்க்க

பல்லடம் நகராட்சியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு

பல்லடம் நகராட்சியில் உள்ள பள்ளிகளில் முதல்வரிடன் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்லடம் நகா்மன்றக் கூட்டம் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் தி... மேலும் பார்க்க

பல்லடம் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

பல்லடம் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்லடம்- மங்கலம் சாலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளநிலை, தமிழ், ஆங்கில இலக்கியம், பொருளியல்,... மேலும் பார்க்க

மதுரை சித்திரைத் திருவிழாவில் பக்தா் மரணம்: இந்து முன்னணி கண்டனம்

மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது பக்தா் உயிரிழந் சம்பவத்துக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பி... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: 15 வேலம்பாளையம்

15 வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அவிநாசி... மேலும் பார்க்க

திருமுருகன்பூண்டியில் ரூ.5.85 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்

அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி நகராட்சியில் ரூ.5.85 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மண் சாலைகளை தாா் சாலைக... மேலும் பார்க்க