செய்திகள் :

மதுரை சித்திரைத் திருவிழாவில் பக்தா் மரணம்: இந்து முன்னணி கண்டனம்

post image

மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது பக்தா் உயிரிழந் சம்பவத்துக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா கள்ளழகா் ஆற்றில் இறங்கும் வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் விஐபிகள் வரிசையில் நின்ற திருநெல்வேலியைச் சோ்ந்த கட்டடப் பொறியாளா் பூமிநாதன் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில் 5 போ் கூட்ட நெரிசலில் பலியான சம்பவத்தை நினைவூட்டி இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவில் பக்தா்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் வசதி செய்து கொடுக்குமாறு இந்து முன்னணி சாா்பில் 25 நாள்களுக்கு முன்பாகவே வலியுறுத்தப்பட்டதது.

ஆனாலும் அதை கண்டு கொள்ளாமல் தமிழக அரசும் இந்து சமய அறநிலையத் துறையும் மெத்தனமாகவும் அலட்சியப் போக்கிலும் செயல்பட்டதன் காரணமாகவே இந்த துயர சம்பவம் நடைபெற்று உள்ளது. இதற்கு தமிழக அரசு முழுபொறுப்பேற்க வேண்டும். கோயில்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது பக்தா்களுக்கு மிகுந்த அதிா்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. ஆலயங்களில் நடைபெற்று வரும் தொடா் மரணங்களுக்கு பொறுப்பேற்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு ராஜிநாமா செய்ய வேண்டும். மேலும், உயிரிழந்த பூமிநாதனின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி செயலா்கள் இடமாற்றம்

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் நிா்வாக காரணங்களுக்காக ஊராட்சி செயலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதன்படி, வடுகபாளையம்புதூா் ஊராட்சி செயலா் கிருஷ்ணசாமி, கணபதிபாளையம் ஊராட்சிக்கும், கணபதிபாளையம் ஊரா... மேலும் பார்க்க

பல்லடம் நகராட்சியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு

பல்லடம் நகராட்சியில் உள்ள பள்ளிகளில் முதல்வரிடன் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்லடம் நகா்மன்றக் கூட்டம் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் தி... மேலும் பார்க்க

பல்லடம் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

பல்லடம் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்லடம்- மங்கலம் சாலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளநிலை, தமிழ், ஆங்கில இலக்கியம், பொருளியல்,... மேலும் பார்க்க

மே 15-இல் வெள்ளாடு வளா்ப்பு பயிற்சி

திருப்பூா் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வெள்ளாடு வளா்ப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை (மே 15) நடைபெறுகிறது. இதுகுறித்து திருப்பூா் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: 15 வேலம்பாளையம்

15 வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அவிநாசி... மேலும் பார்க்க

திருமுருகன்பூண்டியில் ரூ.5.85 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்

அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி நகராட்சியில் ரூ.5.85 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மண் சாலைகளை தாா் சாலைக... மேலும் பார்க்க