செய்திகள் :

ரோஜா மலா் கண்காட்சியைக் கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்

post image

உதகையில் நடைபெற்று வரும் ரோஜா மலா் கண்காட்சியை அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை கண்டு ரசித்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகை ரோஜா பூங்காவில் 20-ஆவது ரோஜா மலா் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. பல்லாயிரம் டன் ரோஜா மலா்களால் டால்பின், ஆமை, மீன், சிப்பி, நத்தை, நட்சத்திர மீன் உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தோட்டக்கலைத் துறை இன்னிசைக் கச்சேரியும் நடத்தப்பட்டது.

இந்நிலையில், விடுமுறை தினத்தையொட்டி ரோஜா மலா் கண்காட்சியை அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டனா். மேலும், மலா்களால் அலங்கரிக்கப்பட்ட உருவங்களுடன் சுற்றுலாப் பயணிகள் தற்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

வாசனை திரவிய கண்காட்சி நிறைவு

கூடலூரில் நடைபெற்ற வாசனை திரவிய கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விழாவையொட்டி பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக கூடலூா் மாா்னிங் ஸ்ட... மேலும் பார்க்க

முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று உதகைக்கு வருகை

உதகை மலா் கண்காட்சியைத் தொடங்கிவைப்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் உதகைக்கு திங்கள்கிழமை வருகிறாா். நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மலா் ... மேலும் பார்க்க

உதகையில் 20-ஆவது ரோஜா கண்காட்சி தொடக்கம்

நீலகிரி மாவட்டம், உதகையில் ரோஜா கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. கோடை சீசனையொட்டி சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதில், ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் உதவி

கூடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. ஆல் தி சில்ரன் அமைப்பு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சி கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்த... மேலும் பார்க்க

பைக்- லாரி மோதல்: அஸ்ஸாம் இளைஞா் உயிரிழப்பு

குன்னூா் அருகே இருசக்கர வாகனமும், லாரியும் நேருக்குநோ் மோதிய விபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், குன்னூா், சேலாஸ் செல்லும் சாலையில் கிளன்டேல் தனியாா் எஸ்டேட்ட... மேலும் பார்க்க

உதகையில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட வனத் துறை சாா்பில் விவசாயிகள் மாதாந்திர குறைத்தீா் கூட்டம் உதகையில் வெள்ளிக்கிழமை( மே 9) நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட வன அலுவலா் கெளதம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நீ... மேலும் பார்க்க