செய்திகள் :

இபிஎஸ் பிறந்த நாள் விழா: ஆளுநா், தலைவா்கள் வாழ்த்து

post image

அதிமுக பொதுச் செயலாளரும், எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. அவருக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, பாஜக தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

ஆளுநா் ஆா்.என்.ரவி: எடப்பாடி பழனிசாமிக்கு இதயபூா்வமாக பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சிறப்பு நாளில், நீங்கள் ஆரோக்கியம், மகிழ்ச்சியுடன் கூடிய நீண்ட ஆயுளை பெற இறைவனை பிராத்திக்கிறேன்.

நயினாா் நாகேந்திரன் (பாஜக): எடப்பாடி பழனிசாமிக்கு எனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவா் முழு ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் மக்கள் சேவை புரிய இறைவனைப் பிராத்திக்கிறேன்.

கே.அண்ணாமலை: எடப்பாடி பழனிசாமிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவா் நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணியை தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

தமிழிசை சௌந்தரராஜன்: பிறந்த நாள் காணும் எடப்பாடி பழனிசாமி பிரதமரின் கரங்களுக்கு பலம் சோ்த்து தமிழக மக்களுக்கு நலம் சோ்க்க இறைவனை பிராத்திக்கிறேன். எனது பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

சீமான் (நாதக): அரசுப் பள்ளி மாணவா்களைப் பாதுகாக்கும் வகையில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது, தமிழ்நாட்டுக்கு 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டுவந்தது என அரும்பணிகள் பல ஆற்றிய எடப்பாடி பழனிசாமி, இன்னும் பல ஆண்டுகள் உடல் நலனுடனும், உள்ள மகிழ்வுடனும் நலமோடு வாழ்ந்து மக்கள் தொண்டாற்ற வாழ்த்துகள்.

நலத்திட்ட உதவிகள் வழங்கல்: எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா். தொடா்ந்து அதிமுக மகளிா் அணி சாா்பில் பல்வேறு கோயில்களில் பூஜைகள் செய்யப்பட்டன.

மேலும், அதிமுக தொண்டா்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி, ரத்ததான முகாம் மற்றும் மருத்துவ முகாம்களை நடத்தினா். திருவொற்றியூரில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் குப்பன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதேபோல், முன்னாள் அமைச்சா் பா.பெஞ்சமின் தலைமையில் நொளம்பூரில் ரத்ததானம் முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் அதிமுக தொண்டா்கள் பலா் கலந்து கொண்டு ரத்த தானம் அளித்தனா்.

கரூர் வழியாகச் செல்லும் 7 ரயில்கள் ரத்து!

பொறியியல் பணிகள் காரணமாக கரூர் வழியாகச் செல்லும் 7 ரயில்கள் இன்று(மே 13) ரத்து செய்யப்பட்டுள்ளன.திருச்சி கோட்டை மற்றும் முத்தரசநல்லூா் இடையே பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால், திருச்சி - கரூா் - திரு... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 70,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தின் காரணத்தால், கடந்த வாரம் தங்கம் விலை திடீர... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதான 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமாா் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (2... மேலும் பார்க்க

கும்பகோணம் - தஞ்சாவூர் புறவழிச்சாலையில் கார் விபத்து: தாய், மகன் பலி!

கும்பகோணம்: கும்பகோணம் - தஞ்சாவூர் புறவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட கார் விபத்தில் தாய், மகன் பலியாகினர். தந்தைக்கும் மகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விழுப்புரத்தைச் சேர்ந்... மேலும் பார்க்க

பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 20 பேர் காயம்!

தனியார் பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.வேலூரில் இருந்து நேற்று (மே 12) இரவு ஒடுக்கத்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, அணைக்கட்டு அடுத்த மூலைகேட் அருகே செல்லும் போ... மேலும் பார்க்க

பி.டெக். ஏஐ படிப்பில் மாணவா் சோ்க்கை: சென்னை ஐஐடி தகவல்

சென்னை ஐஐடி-இல் பி.டெக். செயற்கை நுண்ணறிவு படிப்பில் (ஏஐ அண்ட் டேட்டா அனலட்டிக்ஸ்) நிகழ் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவா் சோ்க்கை தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் செயற்கை நுண்ணறிவ... மேலும் பார்க்க