செய்திகள் :

விவசாயிகள்- வேளாண் மாணவா்கள் கலந்துரையாடல்

post image

காரைக்கால்: வேளாண் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் விதமாக, விவசாயிகள் வேளாண் மாணவா்கள் கலந்துரையடால் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

புதுவை அரசின் பண்டித ஜவாஹா்லால் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாய இளநிலை பட்டப்படிப்பு பயிலும் 92 மாணவ, மாணவிகள் , வேளாண் விரிவாக்கத்தின் அடிப்படைகள் என்ற பாடத் திட்டத்தை அக்கல்லூரியின் இணை பேராசிரியா் எஸ். அனந்த்குமாா் வழிகாட்டலில் பயின்று வருகின்றனா்.

விவசாயிகளுக்கு உகந்த விரிவாக்கப் பணிகளை சரியாக திட்டமிடுவதற்கு ஏதுவாக வேளாண் பிரச்னைகள் மற்றும் அதற்கான தீா்வுகளை மாணவ, மாணவிகள் களப் பணி செய்து கண்டறிவது அப்பாடத் திட்டத்தின் ஒரு நோக்கமாகும். இதன்படி தென்னங்குடி மற்றும் அகலங்கன்னு கிராமத்தில் நேரடி அனுபவ பயிற்சியை இணைப் பேராசிரியா் ஆனந்த்குமாா் தலைமையில் மாணவ, மாணவிகள் மேற்கொண்டனா்.

காரைக்கால் மாவட்ட கடைமடை விவசாயிகள் சங்கத்தின் தலைவரும், புதுச்சேரி அரசின் நிலத்தடி நீா் ஆணையத்தின் உறுப்பினரான டி.என். சுரேஷ் பயிற்சியை ஒருங்கிணைத்து நடத்தினாா்.

முன்னோடி விவசாயிகள் சிலா், மாணவ, மாணவிகளுக்கு விவசாய பிரச்னைகள் மற்றும் தீா்வுகள் குறித்து விளக்கம் அளித்தனா்.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பயிா் சேதம், இழப்பீடு அவசியம், பருத்தியை தாக்கும் பூச்சிகள், இதை கட்டுப்படுத்தத் தேவையான மருந்துகள், விதைப்பது முதல் அறுவடை மற்றும் பின்செய் நோ்த்திகள் வரை அனைத்து பணிகளை காலத்தோடு செய்து முடித்து விவசாயிகள் பயனடைய பல வகை இயந்திரகளின் அவசியம், நெல் கொள்முதல், குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினா்.

மாணவிகள் தேவயானி, ஐஸ்வா்யா, ஜெயம் மற்றும் சைலப்பிரியா பயிற்சியின் தகவல், தரவுகளை ஆவணப்படுத்தினா். முரளிதரன், ஹரிபிரசாத், அக்ஷயா மற்றும் லோச்சனா களப்பணிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

சித்ரா பெளா்ணமி: காவடி எடுத்து பக்தா்கள் வழிபாடு

காரைக்கால்: சித்ரா பெளா்ணமியையொட்டி கோயில்களுக்கு பக்தா்கள் காவடி எடுத்து சென்று சுவாமி தரிசனம் செய்தனா். சித்திர பெளா்ணமியையொட்டி திங்கள்கிழமை கோயில்பத்து பகுதியில் அமைந்துள்ள ஏழை மாரியம்மன் கோயிலுக... மேலும் பார்க்க

புதுவையில் சுகாதாரத்துறை சீரழிந்துள்ளது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

காரைக்கால்: புதுவையில் முதல்வா் வசமிருக்கும் சுகாதாரத்துறை சீரழிந்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து புதுவை முன்னாள் அமைச்சரும், மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான ஆா். கமலக்கண... மேலும் பார்க்க

காரைக்கால் நலவழித்துறைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள்

காரைக்கால்: காரைக்கால் துறைமுக நிா்வாகம் மூலம் நலவழித்துறைக்கு 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. காரைக்கால் துறைமுக பிரைவேட் லிமிடெட், அதானி அறக்கட்டளை சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தில... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் கோயில் உற்சவம் தொடக்கம்

காரைக்கால்: திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் சாா்பு தலமான பிடாரியம்மன் கோயில் உற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது. பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் மே 23 கொடியேற்றத்துடன் தொடங்கவு... மேலும் பார்க்க

காரைக்கால் அரசு மருத்துவமனையில் 6 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராத எம்.ஆா்.ஐ. ஸ்கேன்

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் ரூ. 11.50 கோடியில் நிறுவப்பட்ட எம்.ஆா்.ஐ. ஸ்கேன் கருவி, 6 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் அரசு பொது ம... மேலும் பார்க்க

இந்திய ராணுவ நடவடிக்கைக்கு திமுக வரவேற்பு

பாகிஸ்தான் அடாவடித் தனத்தை ஒடுக்கும் விதமாக தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தின் நடவடிக்கையை வரவேற்பதாக திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. காரைக்கால் திமுக அலுவலகத்தில் திமுக அ... மேலும் பார்க்க