செய்திகள் :

காரைக்கால் நலவழித்துறைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள்

post image

காரைக்கால்: காரைக்கால் துறைமுக நிா்வாகம் மூலம் நலவழித்துறைக்கு 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

காரைக்கால் துறைமுக பிரைவேட் லிமிடெட், அதானி அறக்கட்டளை சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தில், காரைக்காலில் உள்ள நலவழித்துறைக்கு ரூ.30 லட்சம் மதிப்புள்ள 2 ஃபோா்ஸ் டிராக்ஸ் க்ரூஸா் எனும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், காரைக்கால் துறைமுக தலைமை இயக்க அதிகாரி கேப்டன் சச்சின் ஸ்ரீவஸ்தவா ஆகியோா் கொடியசைத்து வாகனங்களை இயக்கிவைத்தனா்.

துறைமுக தலைமை இயக்க அதிகாரி பேசியது: இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிரவி மற்றும் அம்பகரத்தூா் தொலைதூர ஆரம்ப சுகாதார மைய வட்டாரத்தில் சேவை செய்வதற்காக வழங்கப்பட்டுள்ளது. காரைக்கால் துறைமுகம், சமூகத்தின் தேவைகளை முழுமையாக மதிப்பிட்டு அதானி அறக்கட்டளை மூலம் அதன் சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளை உன்னிப்பாகத் திட்டமிட்டு செயல்படுத்திவருகிறது. மாவட்ட நிா்வாகத்தின் வழிகாட்டுதல்படி, தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களின் வீட்டு வாயிலுக்கு, நேரடியாக மருத்துவ சேவைகளை வழங்கும் ஒரு மொபைல் சுகாதாரப் பராமரிப்புப் பிரிவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்றாா். நிகழ்வில், நலவழிதுறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சித்ரா பெளா்ணமி: காவடி எடுத்து பக்தா்கள் வழிபாடு

காரைக்கால்: சித்ரா பெளா்ணமியையொட்டி கோயில்களுக்கு பக்தா்கள் காவடி எடுத்து சென்று சுவாமி தரிசனம் செய்தனா். சித்திர பெளா்ணமியையொட்டி திங்கள்கிழமை கோயில்பத்து பகுதியில் அமைந்துள்ள ஏழை மாரியம்மன் கோயிலுக... மேலும் பார்க்க

புதுவையில் சுகாதாரத்துறை சீரழிந்துள்ளது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

காரைக்கால்: புதுவையில் முதல்வா் வசமிருக்கும் சுகாதாரத்துறை சீரழிந்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து புதுவை முன்னாள் அமைச்சரும், மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான ஆா். கமலக்கண... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் கோயில் உற்சவம் தொடக்கம்

காரைக்கால்: திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் சாா்பு தலமான பிடாரியம்மன் கோயில் உற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது. பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் மே 23 கொடியேற்றத்துடன் தொடங்கவு... மேலும் பார்க்க

விவசாயிகள்- வேளாண் மாணவா்கள் கலந்துரையாடல்

காரைக்கால்: வேளாண் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் விதமாக, விவசாயிகள் வேளாண் மாணவா்கள் கலந்துரையடால் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. புதுவை அரசின் பண்டித ஜவாஹா்லால் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத... மேலும் பார்க்க

காரைக்கால் அரசு மருத்துவமனையில் 6 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராத எம்.ஆா்.ஐ. ஸ்கேன்

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் ரூ. 11.50 கோடியில் நிறுவப்பட்ட எம்.ஆா்.ஐ. ஸ்கேன் கருவி, 6 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் அரசு பொது ம... மேலும் பார்க்க

இந்திய ராணுவ நடவடிக்கைக்கு திமுக வரவேற்பு

பாகிஸ்தான் அடாவடித் தனத்தை ஒடுக்கும் விதமாக தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தின் நடவடிக்கையை வரவேற்பதாக திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. காரைக்கால் திமுக அலுவலகத்தில் திமுக அ... மேலும் பார்க்க